காசா முழுவதும் ஒலிபரப்பட்ட நெதன்யாகுவின் ஐ.நா உரை: இஸ்ரேலிய அரசின் புதிய நடவடிக்கை
ஐக்கிய நாடுகள் சபையில் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு பேசிய உரை காசாவில் ஒலி பரப்பப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையில் நெதன்யாகு
வெள்ளிக்கிழமை ஐக்கிய நாடுகள் சபையில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உரையாற்றினார்.
அதில், காசாவில் ஹமாஸ் நடவடிக்கைகள் முழுவதுமாக முடித்து வைக்கப்படும் என்றும், அதுவரை போரை முடிவுக்கு கொண்டு வர முடியாது என்றும் தெரிவித்தார்.
இஸ்ரேலிய பிரதமரின் ஐ.நா உரையை புறக்கணிக்கும் நடவடிக்கையாக பல்வேறு நாடுகளின் உறுப்பினர்கள் நெதன்யாகு உரையின் போது வெளிநடப்பு செய்தது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
காசாவில் ஒளிபரப்பப்பட்ட உரை
இஸ்ரேலிய பிரதமரின் இந்த வார்த்தைகள் காசா பொது மக்களை சென்றடையும் விதமாக, இஸ்ரேலிய ராணுவம் இஸ்ரேல்-காசா எல்லையில் டிரக்குகளில் பிரம்மாண்ட ஒலிபெருக்கி அமைத்து காசா நகருக்குள் பலமாக ஒலி பரப்பியுள்ளது.
Happening now at the UN General Assembly:
— sarah (@sahouraxo) September 26, 2025
Diplomats walked out during Netanyahu’s speech.
He is left speaking to an empty room.
The world is no longer listening to Israel’s propaganda. pic.twitter.com/yV704rh32t
மேலும் காசாவில் உள்ள பொதுமக்கள் மற்றும் ஹமாஸ் அதிகாரிகளின் தொலைபேசிகளை இஸ்ரேலிய ராணுவம் ஹேக் செய்து அதில் நேரலையில் ஒலிபரப்பும் நடவடிக்கையையும் மேற்கொண்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |