மரியுபோல் அருகில் 131 அடி வெகுஜன புதைகுழி: அதிர்ச்சியுட்டும் புதிய செயற்கைகோள் புகைப்படங்கள்!
செய்தி சுருக்கம்:
- அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் பதுங்கி இருக்கும் 2000 பொதுமக்கள்
- மரியுபோல் நகருக்கு அருகில் எடுக்கப்பட்ட 131 அடி நிளமுள்ள வெகுஜன புதைகுழி செயற்கைகோள் புகைப்படம்
- 9000 பொதுமக்கள் சடலங்கள் வரை இடம்பெற்று இருக்கலாம் உக்ரைன் தரப்பு தெரிவிப்பு
ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களால் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ள 131 அடி நீளமுள்ள வெகுஜன புதைகுழி தொடர்பான செயற்கைகோள் புகைப்படத்தை Maxar டெக்னாலஜிஸ் வெளியிட்டுள்ளது.
உக்ரைனில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையானது இரண்டு மாதங்களை கடக்க இருக்கும் நிலையில், ரஷ்ய ராணுவ வீரர்கள் செய்து வரும் போர் அத்துமீறல் தொடர்பான ஆதாரங்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.
உக்ரைனின் புச்சா நகரில் ரஷ்ய ராணுவத்தினர் நடத்திய மிகப் பெரிய மனித உயிர் அழிப்பு தொடர்பாக வெளிவந்த புகைப்படங்கள் மற்றும் விடியோ ஆதாரங்கள் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை எற்படுத்தியது.
இந்த நிலையில், 2000 உக்ரைனியர்கள் பதுங்கி இருக்கும் அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையை தவிர, உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோலை ரஷ்ய ராணுவம் முழுவதுமாக தனது கட்டுபாட்டிற்குள் கொண்டுவந்து, புச்சா நகரில் நடத்தியது போல் மிகப் பெரிய மனித உயிர் அழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக மரியுபோல் நகரில் அருகில் உள்ள Vynohradne கிராமத்தில் ரஷ்ய ராணுவத்தால் கொலை செய்யப்பட்டு புதைக்கபட்ட 131 அடி நிளமுள்ள வெகுஜன புதைகுழி செயற்கைகோள் புகைப்படத்தை Maxar டெக்னாலஜிஸ் இன்று வெளியிட்டுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: 8வது மாடியில் இருந்து குதித்த கை கால்கள் கட்டப்பட்ட பெண்: கையும் களவுமாக சிக்கிய குற்றவாளி!
இதைப்போல கடந்த வியாழக்கிழமை Maxar டெக்னாலஜிஸ் மற்றொரு செயற்கைகோள் புகைப்படத்தில் புதிதாக தொண்டப்பட்ட 200 புதைகுழிகள் இடம்பெற்று இருந்தது.
இந்த புகைப்படத்தை குறிப்பிட்டு கருத்து தெரிவித்து இருந்த Andryushchenko ரஷ்ய ராணுவத்தின் பொதுமக்கள் மீதான அத்துமீறல்கள் மீண்டும் அம்பலமாகியுள்ளது என தெரிவித்து இருந்தார்.
மேலும் இந்த புதைகுழிகளில் கிட்டதட்ட 9000 பொதுமக்கள் சடலங்கள் வரை இடம்பெற்று இருக்கலாம் என உக்ரைன் தெரிவித்தது ஆனால் இதற்கு ரஷ்யா எந்தவொரு பதிலும் வழங்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.
இந்த செய்திக்கான வளம்: MailOnline