எதிரிகளுடன் பேச வேண்டிய அவசியம் இல்லை: வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங்-உன் அதிரடி!
அணு ஆயுதம் கையாள்வதற்காக அமைக்கப்பட்ட ராணுவ பயிற்சியை கிம் ஜாங்-உன் ஆய்வு.
எதிரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த எந்தவொரு தேவையும் இல்லை என கருத்து.
நாட்டின் எதிரிகளுடன் பேச வேண்டிய அவசியம் இல்லை என வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாகவே வட கொரியா தனது அடுத்தடுத்த பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஜப்பான் மற்றும் தென் கொரிய கடல் பகுதிக்கு அருகே பரிசோதித்து வருகிறது.
வட கொரியாவின் இந்த அடுத்தடுத்த ஏவுகணை பரிசோதனைகளை அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் கண்டனம் தெரிவித்த நிலையில், ராணுவ பலத்தை மேலும் பலப்படுத்துவதற்காக ஜப்பான், தென் கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்டனர்.
epa
மேலும் வடகொரியாவின் ஏவுகணை மிரட்டலுக்கு பதிலடி தரும் வகையில், அமெரிக்காவும் தங்களது நான்கு ஏவுகணை வானில் ஏவி பரிசோதித்து மிரட்டியது.
இந்நிலையில், தனது நாட்டின் எதிரிகளுடன் பேச வேண்டிய அவசியம் இல்லை என்று கருதுவதாக வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங்-உன் தெரிவித்துள்ளார்.
வட கொரியாவின் எதிரிகளுடன் விவாதிக்க எதுவும் இல்லை என்று வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங்-உன் தெரிவித்தாக கொரிய மத்திய செய்தி நிறுவனத்தை (KCNA) மேற்கோள் காட்டி யோன்ஹாப் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
அணு ஆயுதங்களைக் கையாள்வதற்காக அர்ப்பணிக்கப்பட்ட பிரிவுகளின் ராணுவப் பயிற்சியை ஆய்வு செய்தபோது வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன் இந்த கருத்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும் இந்த வட கொரியாவின் போர் பயிற்சி செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 9 வரை நடந்ததாகவும், இதே திகதியில் அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து நடத்திய போர் பயிற்சியும் இடம்பெற்று இருந்ததாக KCNA தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கையானது, ஜப்பான் எல்லையில் வட கொரியா நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணை பறந்து சென்ற சிறிது நேரத்தில் வெளிவந்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: பிரித்தானியாவில் அழகிய இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபம்: அதிரடி நடவடிக்கை எடுத்த பொலிஸார்
வட கொரியாவின் இந்த ஏவுகணை பரிசோதனையானது சர்வதேச விமர்சனங்களை அதிகரித்துள்ளது.