முதல் கொரோனா மரணத்தை பதிவு செய்த வடகொரியா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
வடகொரியா தனது முதல் கொரோனா பெருந்தொற்று மரணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் வுஹான் மாகாணத்தில் இருந்து கோவிட்-19 என்று அழைக்கப்படும் கொரோனா பெருந்தொற்று பரவதொடங்கி, உலகம் முழுவதும் பல்லாயிரக் கணக்கான மக்களை கொன்று குவித்தது.
இதில் உலகின் பெரும்பாலான நாடுகள் பாதிக்கப்பட்டு கடும் இன்னலுக்கு உள்ளான நிலையில், வடகொரியா மட்டும் எந்தவொரு பாதிப்பும் இல்லை என தெரிவித்து பிற நாடுகளுடனான அனைத்து தொடர்பையும் துண்டித்தது.
இதையடுத்து தற்போது உலக நாடுகள் கொரோனா பெருந்தொற்றில் இருந்து சிறிது சிறிதாக வெளியேறி வரும் வேளையில், வடகொரியா தனது முதல் கொரோனா பெருந்தொற்று மரணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
வடகொரியாவில் ஏப்ரல் பிற்பகுதியில் இருந்து காரணத்தை கண்டறிய முடியாத காய்ச்சல் ஒன்று பரவத் தொடங்கியதையடுத்து, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட கோவிட் பரிசோதனையில் கொரோனா பெருந்தொற்று உறுதியாகியுள்ளது.
இந்தநிலையில், வடகொரியாவில் பல்லாயிரக்கணக்கானோர் காய்ச்சல் அறிகுறிகளை அனுபவித்து வருவதாகவும் அதில் 6 நபர்கள் வரை உயிரிழந்து இருப்பதாகவும் அவற்றில் ஒருவருக்கு ஓமிக்ரான் சோதனையில் நேர்மறை முடிவு இருந்தாகவும் மாநில அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் சுமார் 350,000 பேர் அந்த காய்ச்சலின் அறிகுறிகளைக் கொண்டு இருப்பதாகவும் இதில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 187,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தகவல் தெரிவித்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: புலம்பெயர முயன்றவர்களின் படகு கவிழ்ந்து விபத்து: 11 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
வடகொரியாவில் அதிகரித்து வரும் காய்ச்சல் அறிகுறிகளை தொடர்ந்து வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் முதல்முறையாக முககவசத்துடன் அந்த நாட்டின் தொலைகாட்சியில் தென்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.