ரஷ்யாவிற்காக உயிர்நீத்த படைவீரர்கள் நினைவாக அருங்காட்சியகம் திறந்த வடகொரியா
உக்ரைன் போரில் ரஷ்யாவிற்காக உயிரிழந்த வடகொரிய படைவீரர்களை நினைவுகூரும் வகையில் பியோங்க்யாங்கில் புதிய அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது.
Memorial Museum of Combat Feats எனப்படும் இந்த அருங்காட்சியகம், ரஷ்யாவின் குர்ஸ்க் எல்லைப் பகுதியில் நடந்த போரின் முதல் ஆண்டு நிறைவையொட்டி திறக்கப்பட்டது.
திறப்பு விழாவில் வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன், ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆண்ட்ரே பெலோசோவ், ரஷ்ய பாராளுமன்றத் தலைவர் வ்யாச்செஸ்லாவ் வோலோடின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் கிம், உயிரிழந்த வீரர்களின் உடல்களுக்கு மண்ணிட்டு, மலர் அஞ்சலி செலுத்தினார்.

தென் கொரியாவின் புலனாய்வு அமைப்பின் தகவலின்படி, சுமார் 15,000 வடகொரிய வீரர்கள் ரஷ்யாவிற்காக போரில் பங்கேற்றதாகவும், அதில் 2,000 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
கிம் ஜொங் உன் தனது உரையில், “இந்த வீரர்கள் கொரிய மக்களின் வீரத்தையும், ரஷ்யா-கொரியா மக்களின் வெற்றிப் பயணத்தையும் குறிக்கும் சின்னமாக இருப்பார்கள்” எனக் கூறினார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், இந்த அருங்காட்சியகம் இரு நாடுகளின் நட்பு மற்றும் ஒற்றுமையின் சின்னமாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.


| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
#NorthKorea #RussiaUkraineWar #KimJongUn #Putin #WarMemorial #Pyongyang #Geopolitics #MilitaryAlliance