நார்வே செஸ்; உலக சாம்பியனை முதல் முறையாக வீழ்த்திய தமிழக வீராங்கனை வைஷாலி
தமிழக வீராங்கனை வைஷாலி முதல்முறையாக உலக சாம்பியன் ஜூ வென்ஜூனை வீழ்த்தியுள்ளார்.
நார்வே செஸ் 2025
நார்வே நாட்டின், ஸ்டாவஞ்சரில் கடந்த மே 26 ஆம் திகதி தொடங்கி ஜூன் 6 ஆம் திகதி வரை வருடாந்திர செஸ் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில், பெண்களுக்கான 6வது சுற்றில், இந்திய கிராண்ட்மாஸ்டர் வைஷாலி ரமேஷ்பாபுவும், உலக சாம்பியனான, சீனாவை சேர்ந்த ஜூ வென்ஜூனும் மோதினர்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில், வைஷாலி முதல்முறையாக 5 முறை உலக சாம்பியனான ஜூ வென்ஜூனை தோற்கடித்துள்ளார்.
VAISHALI beats JU WENJUN! 🔥
— Norway Chess (@NorwayChess) June 3, 2025
This is her first-ever victory over the Women’s World Champion!! 👏👏
She did it in the Armageddon.#NorwayChess ♟️ pic.twitter.com/sc7gT4heEy
இதன் மூலம் 3 புள்ளிகள் பெற்ற வைஷாலி, 9.5 புள்ளிகள் பெற்று, 6 பேர் கொண்ட பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார். இந்தியாவை சேர்ந்த ஹம்பி கோனேரு, 13.5 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறார்.
2024 நார்வே செஸ் போட்டியில் வைஷாலியின் சகோதரர் பிரக்யானந்தா, உலக சாம்பியனான நார்வேவின் மேக்னஸ் கார்ல்சனை முதல்முறையாக தோற்கடித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |