RCB அணியின் முதன்மை விளம்பரதாரராக இணைந்த பிரித்தானிய ஸ்மார்ட் போன் நிறுவனம்
RCB அணியின் முதன்மை விளம்பரதாரராக Nothing நிறுவனம் இணைந்துள்ளது.
ஆர்சிபி
ஐபிஎல் தொடரில் அதிக ரசிகர்களை கொண்ட அணிகளில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி உள்ளது.

2025 ஐபிஎல் தொடரில் முதல்முறையாக RCB அணி கோப்பையை வென்றதன் மூலம், அணியின் சந்தை மதிப்பு 2 பில்லியன் டொலராக உயர்ந்தது.
இதனையடுத்து, RCB அணியின் உரிமையாளரான லண்டனை சேர்ந்த Diageo நிறுவனம் அணியை விற்க உள்ளதாக அறிவித்துள்ளது.
பல தொழிலதிபர்கள், நடிகர்கள் உள்ளிட்டோர் ஆர்சிபி அணியை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், RCB அணியின் புதிய முதன்மை விளம்பரதாரராக Nothing என்னும் மொபைல் நிறுவனம் இணைந்துள்ளது.
இந்த ஒப்பந்தம் 2 ஆண்டுகளுக்கு தொடரும் என RCB அணி அதன் சமூகவலைத்தளத்தில் தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த RCB அணியின் தலைமை இயக்க அதிகாரி ராஜேஷ் மேனன், "நத்திங்கின் துணிச்சலான, படைப்பாற்றல் மிக்க மற்றும் அடுத்த தலைமுறைக்கான கண்ணோட்டம், ஆர்சிபியின் முற்போக்கான அடையாளம் மற்றும் இளம் ரசிகர்களுடனான வலுவான தொடர்பு ஆகியவற்றுடன் தடையின்றி ஒத்துப்போகிறது" என தெரிவித்துள்ளார்.

Nothing இது குறித்து கருத்து தெரிவித்த நத்திங்கின் இணை நிறுவனரும் இந்தியத் தலைவருமான அகிஸ் எவாஞ்சலிடிஸ், 2025 ஆம் ஆண்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் பட்டத்தை வென்ற பிரச்சாரம் உத்வேகத்தை அளித்தது என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த 3 ஐபிஎல் தொடர்களுக்கு RCB அணியின் டைட்டில் ஸ்பான்சராக கத்தார் ஏர்வேஸ் இருந்தது. கத்தார் ஏர்வேஸ் மற்றும் RCB அணிக்கு இடையேயான ஒப்பந்த மதிப்பு சுமார் ரூ.75 கோடி ஆகும்.
பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கும் Nothing என்னும் ஸ்மார்ட் போன் நிறுவனம், கடந்த 2020 ஆம் ஆண்டில் கார்ல் பெய் என்பவரால் உருவாக்கப்பட்டது. கார்ல் பெய், One Plus ஸ்மார்ட் போன் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார்.

சீனாவில் பிறந்த கார்ல் பெய், சுவீடனில் வளர்ந்து அங்கே குடியுரிமை பெற்றுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |