அணு ஆயுதப் போர் ஒருபோதும் வேண்டாம்: உலக நாடுகளுக்கு ஜோ பைடன் வேண்டுகோள்
அணு ஆயுதப் பரவலை தடுக்க அமெரிக்க தலைவர்கள் போராட வேண்டும்.
அத்தகைய போரில் யாராலும் வெற்றி பெற முடியாது என ஜோ பைடன் பேச்சு.
அணுசக்தி போர் என்பது ஒருபோதும் ஏற்படக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் புதன்கிழமை அமெரிக்க பொதுச் சபையில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.
சமீபத்தில் ரஷ்ய படைகள் பெரும்பாலான பகுதிகளை உக்ரைனிய படைகளிடம் இழந்ததை தொடர்ந்து, ரஷ்ய ஜனாதிபதி புடின் உக்ரைனுக்கு எதிராக கூடுதல் படைகளை திரட்டுமாறு உத்தவிட்டுள்ளார்.
EPA
மேலும் மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்துவது தொடர்பாக குழம்பவில்லை எனவும் எச்சரித்து இருந்தார்.
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நாட்டின் பொதுச் சபையில் புதன்கிழமை பேசுகையில், அணுசக்தி யுத்தம் என்பது ஒருபோதும் ஏற்படக்கூடாது என்று உறுதிபட தெரிவித்தார்.
மேலும் அத்தகைய போரில் யாராலும் வெற்றி பெற முடியாது என்றும், ஜோ பைடன் வலியுறுத்தினார். அத்துடன் அமெரிக்கத் தலைவர்கள் உலகெங்கிலும் உள்ள நாடுகளை இராஜதந்திரத்தின் மூலம் அணு ஆயுத பரவல் தடை ஆட்சியை வலுப்படுத்த மறு உறுதி மேற்கொள்ள வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
உலகில் வேறு என்ன நடந்தாலும் முக்கியமான ஆயுத கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தொடர அமெரிக்கா தயாராக உள்ளது என தெரிவித்தார்.
கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைனுக்கு எதிராக 3,00,000 ரஷ்ய வீரர்கள்: அணு ஆயுதங்களை பயன்படுத்துவேன் புடின் என எச்சரிக்கை
அணுசக்தி ஆயுத பயன்பாடு குறித்து ரஷ்யாவை எச்சரித்த ஜோ பைடன், ஜனாதிபதி புடின் பொறுப்பற்ற அணுசக்தி அச்சுறுத்தல்களை செய்வதாகவும், சீனா எந்தவொரு வெளிப்படை தன்மையும் இல்லாமல் அணுசக்தி கட்டமைப்பில் முன்னோடியில்லாத வகையில் நடந்து கொள்கிறது எனவும் ஜோ பைடன் குறிப்பிட்டார்.
EPA