பிரித்தானியாவுக்கு ராணுவ வீரர்களை அனுப்பும் நியூசிலாந்து! பிரதமர் அறிவிப்பு
உக்ரேனிய ராணுவ வீரர்களுக்கு பிரித்தானியாவில் வைத்து பயிற்சியளிக்க ராணுவ வீரர்களை அனுப்புவதாக நியூசிலாந்து அறிவித்துள்ளது.
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் இவ்வாறு அறிவித்துள்ளார்.
L119 இலகுரக துப்பாக்கிகளை இயக்குவரதற்கு உக்ரேனிய வீரர்களுக்கு பயிற்சியளிக்க உதவ, நியூசிலாந்து 30 பாதுகாப்பு படை வீரர்களை பிரித்தானியாவுக்கு அனுப்பும்.
ஜூலை மாத இறுதிவரை பிரித்தானியாவில் இருந்த படி நியூசிலாந்து வீரர்கள் 240 உக்ரேனிய வீரர்களுக்கு பயிற்சி கொடுப்பார்கள்.
நியூசிலாந்து வீரர்கள் இந்தப் பயிற்சிக்காக உக்ரைனுக்குள் நுழைய மாட்டார்கள் என ஆர்டன் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய ராணுவப் படையெடுப்பிற்கு எதிராக உக்ரைனின் பாதுகாப்பிற்கு ஆதரவாக நியூசிலாந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.