ஈரான் மீது புதிய தாக்குதல்களுக்கு ட்ரம்ப் திட்டம்: உச்சத்தை எட்டிய எண்ணெய் விலை
ஈரான் போரில் சாத்தியமான நடவடிக்கைகள் தொடர்பில் புதிய திட்டங்கள் குறித்து, அமெரிக்க இராணுவம் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு விளக்கமளிக்கத் தயாராகி வருவதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து, எண்ணெய் விலைகள் மீண்டும் உயர்ந்துள்ளன.
கிட்டத்தட்ட 7 சதவீதம்
ஈரானுடனான பேச்சுவார்த்தைகளில் நிலவும் முட்டுக்கட்டையை உடைக்கும் முயற்சியாக, அந்த நாடு மீது குறுகிய மற்றும் சக்திவாய்ந்த தாக்குதல் அலைகளை மேற்கொள்ளும் திட்டத்தை அமெரிக்க மத்திய கட்டளைப்பீடம் தயாரித்துள்ளதாக Axios என்ற செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதனையடுத்து பிரெண்ட் கச்சா எண்ணெய் கிட்டத்தட்ட 7 சதவீதம் உயர்ந்து, ஒரு கட்டத்தில் ஒரு பீப்பாய்க்கு 126 டொலருக்கும் (94 பவுண்டுகள்) அதிகமாகச் சென்றது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பிற்குப் பிறகு இது மிக உயர்ந்த விலையாகும்.
அமைதிப் பேச்சுவார்த்தைகள் தேக்கமடைந்திருப்பதாகத் தோன்றுவதாலும், முக்கிய நீர்வழியான ஹார்முஸ் நீரிணை நடைமுறையில் இன்னும் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளதாலும், இந்த வாரம் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ளன.
இந்த நிலையில், Axios வெளியிட்டுள்ள செய்தியில், இந்த முறை ஈரான் மீது முன்னெடுக்கப்படும் தாக்குதல் அதன் உள்கட்டமைப்பையும் குறிவைக்க வாய்ப்புள்ளது என்றே தெரியவருகிறது.
இன்ன்னொன்று, ஹார்முஸ் நீரிணையின் ஒரு பகுதியைக் கைப்பற்றி, வணிக போக்குவரத்திற்கு அனுமதி அளிப்பது. ஆனால் இப்படியான நடவடிக்கைகளுக்கு தரைப்படை அங்கே களமிறக்கப்பட வேண்டும்.
இதனிடையே, அமெரிக்கச் சந்தையில் வர்த்தகம் செய்யப்படும் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் கச்சா எண்ணெயும் 2.3 சதவீதம் உயர்ந்து, ஒரு பீப்பாய்க்கு சுமார் 109 டொலர் என்ற அளவில் இருந்தது.

மிகப்பெரிய தாக்கங்கள்
மேலும் ஜூன் மாதம் விநியோகம் செய்யவிருக்கும் பிரெண்ட் கச்சா எண்ணெய்க்கான ஒப்பந்தம் வியாழக்கிழமை காலாவதியாக உள்ளது. ஆனால் அமுலில் இருக்கும் ஜூலை மாதத்திற்கான ஒப்பந்தம் 2 சதவீதம் அதிகரித்து, ஆசிய சந்தையில் 113 டொலரை எட்டியுள்ளது.
மேலும், மோதல் தீவிரமடைவதற்கான ஒரு சிறிய வாய்ப்பு கூட, உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்ற நிலை உருவாகியுள்ளது.

ஆனால், ஹார்முஸ் நீரிணையைப் பயன்படுத்த முயற்சிக்கும் கப்பல்களை ஈரான் தொடர்ந்து அச்சுறுத்தும் வரை, ஈரானிய துறைமுகங்களுக்கு முற்றுகை தொடரும் என்றே அமெரிக்கா கூறியுள்ளது.
ஈரான் மீது நீண்டகால முற்றுகையை மேற்கொள்ள அமெரிக்கா தயாராகி வருவதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, புதன்கிழமையன்று எண்ணெய் விலைகள் 6 சதவீதம் உயர்ந்தன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |