பிரித்தானியாவில் ஆற்றில் விழுந்த மூவர்! காணமல் போன நபரை தேடும் பணி தீவிரம்!
பிரித்தானியாவில் மாயமான நபரை தேடும் பணியில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
காணாமல் போன நபரை தேடும் பணி தீவிரம்
பெர்த்தில் உள்ள டே ஆற்றில் மாயமான நபரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆற்றில் 3 நபர்கள் விழுந்துவிட்டதாக அவசர சேவைகளுக்கு வியாழக்கிழமை இரவு 7.45 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர், உடனடியாக 2 நபரை பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மூன்றாவது நபர் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், அவரை தேடும் பணி தீவிரமாக முடுக்கி விடப்பட்டுள்ளது.
மாங்க்ரீப் தீவைச் சுற்றி நடைபெறும் இந்த தேடுதல் பணியில் மலை மீட்பு குழுக்கள், ஸ்காட்டிஷ் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், மற்றும் விமான ஆதரவு பிரிவினர் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |