OPEC நாடுகள் மாதாந்திர எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க முடிவு
OPEC+ நாடுகள் மாதாந்திர எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளன.
உலகளாவிய எரிசக்தி சந்தை மீண்டும் சீராகும் நிலையில், சவுதி அரேபியா, ரஷ்யா, ஈராக், குவைத், கசகஸ்தான், அல்ஜீரியா மற்றும் ஓமன் ஆகிய OPEC+ கூட்டமைப்பின் ஏழு முக்கிய உறுப்பினர் நாடுகள், ஆகஸ்ட் மாதம் முதல் தினசரி 1,88,000 பீப்பாய் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளன.
2023-ஆம் ஆண்டில் ஏற்பட்ட வங்கிக் குழப்பங்களால் குறைக்கப்பட்ட உற்பத்தியை படிப்படியாக மீண்டும் உயர்த்தும் நடவடிக்கையின் தொடர்ச்சியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து மாதங்களாக தொடர்ந்து உற்பத்தி அதிகரிப்பு அறிவிக்கப்பட்டு வருகிறது. ஈரானுக்கு எதிரான அமெரிக்கா-இஸ்ரேல் போரின் தாக்கத்தால் எண்ணெய் விலை ஏப்ரல் மாதத்தில் 126 டொலர் வரை உயர்ந்திருந்தது.
ஆனால் சமீபத்தில் ஈரான் போருக்கு முடிவு காணும் முயற்சிகள் மற்றும் ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கியதால் விலை 72 டொலர் வரை குறைந்துள்ளது.
OPEC+ வெளியிட்ட அறிக்கையில், “சந்தை நிலையை கவனமாக மதிப்பீடு செய்து, தேவைக்கேற்ப உற்பத்தி அதிகரிப்பு, நிறுத்தம் அல்லது மாற்றம் செய்யும் சுதந்திரம் எங்களுக்கு உள்ளது” என்று தெரிவித்துள்ளது. அடுத்த கூட்டம் ஆகஸ்ட் 2 அன்று நடைபெற உள்ளது.
ஹார்முஸ் நீரிணை தடைகள் நீங்கியதால் சவுதி அரேபியா மற்றும் ஈரான் அதிகளவில் எண்ணெய் ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளதாக அறியப்படுகின்றன. இதனால் உலக சந்தையில் தற்காலிகமாக அதிக அளவு எண்ணெய் கிடைக்க, விலை குறையும் வாய்ப்பு அதிகம் என மதிப்பிடப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |