12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் அசல் சான்றிதழ்
12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இன்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் 2022-23-ம் கல்வியாண்டுக்கான நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வை 7.55 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
இதற்கான முடிவுகள் மே மாதம் 8ம் தேதி வெளியானது, தற்காலிக மதிப்பெண் பட்டியல் மே 12ம் தேதி முதல் வழங்கப்பட்டு வந்தது.
இதனை வைத்து மாணவர்கள் உயர்கல்வி படிப்புகள் சேர்ந்து வருகின்றனர், இந்நிலையில் இன்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தாங்கள் பயின்ற பள்ளிகளிலேயே அசல் மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.