சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர்..மிகப்பெரிய கட்சியை தடை செய்யும் அரசு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி தடை செய்யப்படவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
சிறையில் இம்ரான் கான்
ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைதாகி சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், சட்டவிரோத திருமண வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
எனினும் மீண்டும் அவர் வன்முறையுடன் தொடர்புடைய 3 வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் இம்ரான் கானின் (Imran Khan) தெக்ரிக்-இ-இன்சப் கட்சியை பாகிஸ்தான் அரசு தடை செய்ய முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
கட்சி தடை
அவரது கட்சி தேச விரோத செயல்களில் ஈடுபடுவதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது. இதன் காரணமாக தெக்ரிக்-இ-இன்சப் கட்சி மீதான தடை விரைவில் அமுலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான அறிவிப்பை தகவல் அமைச்சர் Attaullah Tarar செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார்.
இதற்கிடையில் பாகிஸ்தானின் மிகப்பெரிய கட்சியான இம்ரான் கானின் தெக்ரிக்-இ-இன்சப் தடை செய்யப்பட்டால் கலவரம் வெடிக்கலாம் என்ற அச்சம் நிலவுவதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |