சிந்து நதி நீர் தொடர்பில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: பாகிஸ்தான் பிரதமர் திடீர் அறிவிப்பு
சிந்து நதி நீர் உட்பட பல பிரச்சனைகள் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா மேற்கொள்ள, பாகிஸ்தானுடன் போர் சூழல் ஏற்பட்டது.
இருதரப்பிலும் பலர் உயிரிழக்க, கடந்த மே 10ஆம் திகதி இரண்டு நாடுகளும் சண்டை நிறுத்ததை அறிவித்தன.
ஆனாலும், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா வெளியேறியதால், நீரை தடுப்பது போருக்கான அறிவிப்பு என பாகிஸ்தானின் அமைச்சர் மிரட்டல் விடுத்தார்.
ஷெபாஸ் ஷெரீப்
இந்த நிலையில், பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் (Shehbaz Sharif) இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
அவர், "இந்தியாவுடன் நிலுவையில் உள்ள ஜம்மு - காஷ்மீர், நதி நீர், வர்த்தகம், பயங்கரவாதம் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகள் தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |