நிபந்தனையுடன் சண்டை நிறுத்த பேச்சுவார்த்தை: ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்..லண்டனில் தெரிவித்த அதிகாரிகள்
இந்தியாவுடன் மேலும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில், பாகிஸ்தான் தூதுக்குழு லண்டனில் ஒப்புக் கொண்டுள்ளது.
பாகிஸ்தான் தூதுக்குழு
இந்தியா, பாகிஸ்தான் இடையேயான பதற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில், பிலாவல் பூட்டோ உடன் தூதுக்குழு ஒன்று லண்டன் சென்றது.
அங்கு பிரித்தானிய அரசின் உயர்மட்ட அதிகாரிகளுடன் பாகிஸ்தானின் இந்த தூதுக்குழு பேச்சுவார்த்தை நடத்தியது.
பிலாவல் பூட்டோ
அதனைத் தொடர்ந்து முன்னாள் வெளியுறவு அமைச்சரான பிலாவல் பூட்டோ பேசுகையில்,
"மோதலின்போது எங்களுக்குத்தான் அதிக செல்வாக்கு இருந்தது. அந்த அளவிற்கு அதிகமாக இருந்தபோதிலும், எதிர்காலத்தில் அனைத்து உராய்வுப் புள்ளிகளிலும் நடுநிலையான இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்ற நிபந்தனையின் பேரில் நாங்கள் போர் நிறுத்ததிற்கு ஒப்புக்கொண்டோம்" என லண்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும் அவர், "இந்தியாவுடனான மோதலின்போது பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலை, அவர்களை விட (பாகிஸ்தான்) சிறப்பாக இருந்ததால் முன்னோக்கி செல்லும்போது ட்ரம்ப் அல்லது அவரது அரசாங்கம் அதன் வாக்குறுதியைக் காப்பாற்றும்.
சர்வதேச அளவில், அது அமெரிக்காவாக இருந்தாலும் சரி, பிரித்தானியாவாக இருந்தாலும் சரி, அவர்கள் அனைவரும் தங்கள் பங்கை ஆற்றுவார்கள் என்றும், பேச்சுவார்த்தை மூலம் எங்கள் பிரச்சனைகளைத் தீர்க்க இந்தியாவை நம்ப வைப்பார்கள் என்றும் நாங்கள் நம்புகிறோம்" என தெரிவித்தார்.
அத்துடன் 6 இந்திய ஜெட் விமானங்களை வீழ்த்துவதன் மூலம் பாகிஸ்தான் தனது வலிமையை உறுதிப்படுத்தியுள்ளது என்றும், இப்போது அமைதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |