நிதி நெருக்கடியில் பிரபல ஏர் லைன்ஸ் நிறுவனம்: தனியாருக்கு வழங்குவது குறித்து அரசு ஆலோசனை
பாகிஸ்தான் இண்டர்நேஷனல் ஏர் லைன்ஸ் நிறுவனம் எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து எரிபொருள் வாங்குவதற்கான நிதிப் பற்றாக்குறையில் சிக்கியுள்ளது.
நிதிப்பற்றாக்குறையில் பாகிஸ்தான் ஏர் லைன்ஸ்
எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து எரிபொருள் வாங்குவதற்கான நிதிப் பற்றாக்குறையில் பாகிஸ்தான் இண்டர்நேஷனல் ஏர் லைன்ஸ் சிக்கியுள்ளது.
இந்த காரணத்தால் டஜன் கணக்கான சர்வதேச விமானங்களை ரத்து செய்யும் நிலைக்கு பாகிஸ்தான் இண்டர்நேஷனல் ஏர் லைன்ஸ் நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு நிறுவனமான பாகிஸ்தான் இண்டர்நேஷனல் ஏர் லைன்ஸ் முறையான பில்களை கட்ட முடியாமல் தவித்து வருகிறது.
48 விமானங்கள் கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக பாகிஸ்தான் தரப்பு அதிகாரிகளில் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் நிதி நெருக்கடியை கட்டுப்படுத்த பாகிஸ்தான் இண்டர்நேஷனல் ஏர் லைன்ஸ் நிறுவனத்தை தனியாருக்கு வழங்குவது குறித்து பாகிஸ்தானின் இடைக்கால அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |