இந்தியாவுக்கு போட்டியாக களமிறங்கிய பாகிஸ்தான்! பிரித்தானியாவில் முக்கிய அதிகாரிகளை சந்தித்த குழு
இந்தியாவுக்கு போட்டியாக நியமிக்கப்பட்ட பாகிஸ்தானின் தூதுக்குழு பிரித்தானிய அதிகாரிகளை சந்தித்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் மோதல்
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.
ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து, பயங்கரவாததிற்கு எதிரான பல்வேறு நாடுகளை ஒன்றிணைக்க இந்திய அரசு எம்.பிக்கள் அடங்கிய குழுக்களை அமைத்தது.
இந்த குழுக்கள் பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு, இந்தியாவின் நிலைப்பாடு குறித்து எடுத்துரைத்து வருகின்றது.
இந்த நிலையில், பாகிஸ்தானும் இந்தியாவுக்கு போட்டியாக எம்.பிக்கள் அடங்கிய தூதுக்குழுவை நியமித்து அமெரிக்காவுக்கு அனுப்பியது.
ஒன்பது பேர் கொண்ட இந்த குழு ஐ.நா பிரதிநிதிகளுடனும், அமெரிக்க அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தியது. இதில் இந்தியாவுடனான மோதலில் தங்களது நிலைப்பாடு குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தானின் தூதுக்குழு
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானின் தூதுக்குழு பிரித்தானியாவிற்கு விரைந்துள்ளது. அங்கு பிரித்தானிய அரசின் முக்கிய அதிகாரிகளை எம்.பிக்கள் குழுவினர் சந்தித்து பேச உள்ளனர்.
அப்போது அமெரிக்காவில் பேசியது போல் பாகிஸ்தானின் நிலைப்பாட்டை பிரித்தானியாவிடம் கூற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த பேச்சுவார்த்தையில் சிந்து நதி ஒப்பந்தம், இந்தியாவுடனான பிற பிரச்சனைகள் குறித்தும் தீர்வு காண பாகிஸ்தான் தயாராக இருப்பதாக கூறியதாகவும் பாகிஸ்தான் குழு தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |