பிரபல நடிகை வீட்டிலிருந்து வீசிய துர்நாற்றம்: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள செய்தி
பாகிஸ்தான் நாட்டில் பிரபல நடிகை ஒருவர் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசிய நிலையில், அவர் உயிரிழந்துகிடந்தது தெரியவந்துள்ளது.
உயிரிழந்துகிடந்த பிரபல நடிகை
பகிஸ்தானின் கராச்சியிலுள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வாழ்ந்துவந்தார் பிரபல நடிகையான ஆயிஷா கான் (76).
இந்நிலையில், அவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் பொலிசாருக்கு தகவலளித்தனர்.
பொலிசார் அங்கு விரைந்தபோது, ஆயிஷா வீட்டில் அவர் உயிரிழந்துகிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரது உடல் உருக்குலைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், அவர் உயிரிழந்து ஒரு வாரமாகியிருக்கலாம் என கருதப்படுகிறது.
திரைப்படத்துறையில் புகழ் பெற்றவராக திகழ்ந்த ஆயிஷா தனியாக இறந்துகிடந்த சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ள நிலையில், பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |