எரிபொருள் தட்டுப்பாட்டால் பலூன்களில் சமையல் எரிவாயுவை வாங்கி செல்லும் மக்கள்
எரிபொருள் தட்டுப்பாட்டால் பாகிஸ்தானில் பொதுமக்கள் பலூன்களில் சமையல் எரிவாயுவை வாங்கி செல்கின்றனர்.
எரிபொருள் தட்டுப்பாடு
ஈரான் மற்றும் இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போரில், போர் நிறுத்தம் ஏற்பட்டாலும், ஹார்மோஸ் நீரிணை சுமார் 2 மாத காலமாக முடக்கப்பட்டுள்ளது.

உலகின் 20% எண்ணெய் போக்குவரத்து இந்த பாதை வழியே நடைபெறுவதால், உலகின் பல்வேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.

பாகிஸ்தானில் எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க முன்னறிவிக்கப்பட்ட மின்வெட்டு, ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவது, இணைய வழிக்கல்வி என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
பிளாஸ்டிக் பலூன்களில் சமையல் எரிவாயு
இருப்பினும், சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக கராச்சி மக்கள் பிளாஸ்டிக் பலூன்களில் சமையல் எரிவாயுவை நிரப்பி தற்காலிகமாக சேமிக்கின்றனர்.
இந்த பலூன்கள், உள்ளூர் சந்தைகளில் சுமார் 1,000 ரூபாய் முதல் 1,500 வரை கிடைக்கும்.

குறிப்பாக அதிக மக்கள் அடர்த்தி கொண்ட பகுதிகளில், சிறிய உராய்வு, வெப்ப வெளிப்பாடு அல்லது ஒரு தீப்பொறி கூட வெடிப்பைத் தூண்டக்கூடும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
வீடுகளுக்குள் இதுபோன்ற தற்காலிக சேமிப்பு அமைப்புகள் இருப்பது, தீ விபத்துகள் குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளதுடன், அதிகாரிகள் உடனடியாகத் தலையிட வேண்டும் என்றும் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |