புடின் இல்லை என்றால் மட்டுமே அது சாத்தியம்: ஜெலென்ஸ்கியின் ஆலோசகர் அதிரடி
சமாதான பேச்சுவார்த்தைக்கு யதார்த்தத்தை இன்னும் மதிப்பிடக் கூடிய புதிய தலைவர் வேண்டும்.
எலும்புகளில் நடனமாடுபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை என உக்ரைனிய ஜனாதிபதியின் ஆலோசகர் தகவல்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பதவியில் இல்லை என்றால் ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெறலாம் என உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை கிழக்கு உக்ரைனின் நான்கு பிரதேசங்களை ரஷ்யாவுடன் முறையாக இணைப்பதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் அறிவித்தார். இதற்கு உக்ரைன் மற்றும் பல்வேறு உலக நாடுகள் கட்டணம் தெரிவித்ததுடன், ரஷ்யாவின் வாக்கெடுப்பு நடைமுறைகளை அங்கீகரிக்க முடியாது என அறிவித்தது.
EPA
இதனை தொடர்ந்து சனிக்கிழமையான இன்று 5000 முதல் 5500 ரஷ்ய வீரர்கள் வரை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லைமன் நகரை சுற்றி வளைத்த உக்ரைனிய படைகள், அந்த நகரை ரஷ்ய படைகளிடம் இருந்து மீட்டெடுத்தனர்.
இந்த நிலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அவரது பதவியில் இல்லை என்றால், உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையில் அமைதி பேச்சுவார்த்தைகள் நடக்கலாம் என உக்ரைனிய அமைதி பேச்சுவார்த்தையாளரும் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் ஆலோசகருமான மைக்கைலோ பொடோலியாக் (Mykhailo Podolyak) கூறினார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ள கருத்தில் உக்ரைனுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு “யதார்த்தத்தை இன்னும் மதிப்பிடக் கூடிய புதிய தலைவர் ஒருவராக மட்டுமே இருக்க முடியும் என்று கூறினார்.
கூடுதல் செய்திகளுக்கு: பிரித்தானிய மன்னர் சார்லஸ் மற்றும் அரச வாரிகளின் முதல் அதிகாரப்பூர்வ புகைப்படம் வெளியீடு!
மேலும் எலும்புகளில் நடனமாடுபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை, ஜனாதிபதி புடின் மற்றும் அவரது பரிவாரங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் விலை எதிர்மறையான மதிப்பை கொண்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.