சிறுமியை திருமணம் செய்ய முயன்ற பிரித்தானியர் கைது: வெளியாகியுள்ள திடுக் தகவல்
பிரான்சிலுள்ள டிஸ்னிலேண்ட் பாரீஸ் என்னும் தீம் பார்க்கில் 9 வயது சிறுமியை திருமணம் செய்ய முயன்றதாக பிரித்தானியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமியை திருமணம் செய்ய முயன்ற பிரித்தானியர் கைது
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை டிஸ்னிலேண்ட் பாரீஸுக்கு மக்கள் வரத்துவங்கும் முன், பிரித்தானியர் ஒருவர், மணப்பெண் போல உடையணிந்த ஒரு 9 வயதுச் சிறுமியுடன் அங்கு வந்துள்ளார்.
அவருடன், உக்ரைன் நாட்டவரான அந்தச் சிறுமியின் தாயும் இருந்துள்ளார்.
அந்தச் சிறுமியை உயரமாக காட்டுவதற்காக அவளுக்கு நான்கு இஞ்ச் உயர ஹைஹீல்ஸ் அணிவிக்கப்பட்டிருந்திருக்கிறது.
திருமணத்துக்காக சுமார் ஏராளமான விருந்தினர்கள் காத்திருக்க, மலர் அலங்காரங்கள் செய்யப்பட்ட ஒரு இடத்தில் இசை நிகழ்ச்சிகள் துவங்கியுள்ளன.
இந்த விடயம் குறித்து தீம் பார்க் ஊழியர்கள் பொலிசாருக்கு தகவலளிக்க, பொலிசார் அந்த பிரித்தானியரைக் கைது செய்துள்ளார்கள். உடனடியாக திருமண நிகழ்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது.
பின்னர் அதிகாரிகள் வெளியிட்ட ஒரு அறிக்கையில், அது ஒரு திருமணம் அல்ல, நூறு துணை நடிகர்களுடன் அரங்கேற்றப்பட இருந்த போலி நிகழ்ச்சி என குறிப்பிடப்பட்டிருந்தது.
வெளியாகியுள்ள திடுக் தகவல்
ஆனால், அந்த திருமணம் தொடர்பில் இன்று திடுக்கிடவைக்கும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
சிறுமியை திருமணம் செய்ய முயன்ற அந்த பிரித்தானியர் ஏற்கனவே, சிறுபிள்ளைகளை சீரழித்த குற்றங்களுக்காக தேடப்படும் ஒரு நபர்.
அவருக்கு 22 வயது என முன்னர் குறிப்பிடப்பட்ட நிலையில், அவருக்கு உண்மையில் 39 வயது என பொலிசார் தற்போது தெரிவித்துள்ளார்கள்.
சிறார் பாலியல் குற்றங்களுக்கான பதிவேட்டில் இடம்பெற்றுள்ள அந்த பிரித்தானியரை பொலிசார் பிரித்தானியாவில் தேடிக்கொண்டிருக்க, அவர் தலைமறைவாகி பிரான்சில் சுற்றிக்கொண்டிருந்திருக்கிறார்.
பிரான்சிலிருக்கும்போது மீண்டும் ஒரு சிறார் குற்றத்தில் ஈடுபட இருந்த அவரைக் குறித்து தீம் பார்க் அலுவலர்கள் பொலிசாருக்கு தகவலளிக்க பொலிசார் அவரைக் கைது செய்துள்ளனர்.
மேலும், அந்தச் சிறுமியின் தாயான உக்ரைன் நாட்டவரான ஒரு 41 வயதுப் பெண், சிறுமியின் தந்தையாக நடிக்கவந்த லாத்வியா நாட்டவரான ஒரு 55 வயது நபர், சகோதரியாக நடித்த லாத்வியா நாட்டவரான ஒரு 24 வயது இளம்பெண் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
200 பெரியவர்கள், 100 சிறுவர்கள் ஆகிய துணை நடிகர்களுடன், 115,000 பவுண்டுகள் செலவில் திட்டமிடப்பட்டிருந்த இந்த திருமணத்தை சமூக ஊடகங்களில் நேரலையில் ஒளிபரப்பவும் சம்பந்தப்பட்ட நபர் திட்டமிட்டிருந்திருக்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |