கறிக்கோழிகளுக்கு நினைவிடம் கோரிய PETA அமைப்பு: அரசின் பதில்
இங்கிலாந்தில், கறிக்கோழிகள் கொண்டு சென்ற லொறி ஒன்று இம்மாத துவக்கத்தில் தீவிபத்துக்குள்ளாகியது.
அதைத் தொடர்ந்து, தீயில் கருகி உயிரிழந்த கோழிகளுக்கு நினைவுப் பலகை ஒன்று அமைக்க PETA அமைப்பு அரசிடம் அனுமதி கோரியது.

அரசின் பதில்
இங்கிலாந்தில், Kelvedon என்னுமிடத்தில், கறிக்கோழிகள் கொண்டு சென்ற லொறி ஒன்று, இம்மாதம், அதாவது, அக்டோபர் மாதம் 9ஆம் திகதி, தீவிபத்துக்குள்ளாகியதில், நூற்றுக்கணக்கான கோழிகள் எரிந்து சாம்பலாகின.

உயிரிழந்த கோழிகளின் நினைவாக, விபத்து நிகழ்ந்த இடத்தில் நினைவுப் பலகை ஒன்று அமைக்க அனுமதிக்கவேண்டும் என விலங்குகள் நல அமைப்பான PETA அமைப்பு நெடுஞ்சாலைத்துறையிடம் கோரியிருந்தது.
ஆனால், நினைவுப் பலகை அமைக்க அனுமதியளிக்க நெடுஞ்சாலைத்துறை மறுத்துவிட்டது.
அப்படி சாலையோரம் நினைவுப்பலகைகள் அமைப்பது வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பக்கூடும் என்றும், அந்த நினைவிடத்தைப் பார்வையிட வருவோருக்கும் பாதுகாப்புப் பிரச்சினைகள் ஏற்படலாம் என்றும் கூறியுள்ள நெடுஞ்சாலைத்துறை, நினைவுப் பலகை அமைக்க அனுமதியளிக்க மறுத்துவிட்டது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |