லண்டனில் காணாமல் போன பெண் பூங்காவில் சடலமாக மீட்பு! பொலிசார் வெளியிட்ட தகவல்
லண்டனில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வேலைக்கு முடிந்து வீட்டிற்கு திரும்பிய பெண் செவிலியர் காணமல் போனதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன் பின் இவர் எங்கு போனார் என்று தெரியவில்லை. இதையடுத்து சக ஊழியர்கள் கடந்த 3-ஆம் திகதி இவர் காணமல் போய்விட்டதாக பொலிசில் புகார் அளித்துள்ளனர்.
இவர் கடைசியாக தன்னுடைய வீட்டிற்காக புறப்பட்ட போது, இரவு 8.20 மணியளவில் காணப்பட்டார். அதன் பின் இவரைப் பற்றி எந்த ஒரு தகவலும் தெரியவில்லை. இவருடைய குடும்பம் செக் குடியரசி உள்ளதால், அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது எந்த ஒரு விபரமும் தெரியவில்லை.
Petra Srncova, 32, has been #missing from #Camberwell #Southwark #SE5 since 28 Nov.
— Southwark Police | Central South BCU (@MPSSouthwark) December 9, 2021
Her family & police are increasingly concerned for her welfare.
Have you seen her? Do you have info that could help?
☎️ 101 ref 21MIS037753.https://t.co/MsElU8n1fI
இதனால் பொலிசார் மக்களின் உதவியை நாடியிருந்தனர். Petra Srncova-வின் புகைப்படத்தை பதிவிட்டு இவர் தொடர்பான தகவல் தெரிந்தால், உடனடியாக தெரிவிக்கும் படி கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது Petra Srncova லண்டனின் Camberwell உள்ள Brunswick பூங்காவில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 11.40 மணியளவில் பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்று பார்த்த போது, இது உறுதியாகியுள்ளது. இது குறித்து அவருடைய குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் கூறினர்.
ஆனால் அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து எந்த ஒரு விபரமும் வெளியாகவில்லை. லண்டனில் சமீப காலமாக காணமல் போகும் பலர் இது போன்று சடலமாக மீட்கப்பட்டு வருவது வழக்கமாகி வருவதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.