சில நாடுகளின் தலையீடு இல்லாமல் பைப்லைன் தாக்குதல் சாத்தியமற்றது: ரஷ்யா குற்றச்சாட்டு
நோர்ட் ஸ்ட்ரீம் கசிவு தொடர்பாக பல நாடுகள் மாஸ்கோவை தொடர்பு கொள்ள தயாராக இல்லை.
பல நாடுகளின் தலையீடு இல்லாமல் பயங்கரவாத தாக்குதல் சாத்தியமில்லை.
நோர்ட் ஸ்ட்ரீம் குழாயை சேதப்படுத்திய பயங்கரவாத செயல் சில நாடுகளின் தலையீடு இல்லாமல் நடந்திருக்க முடியாது என ரஷ்யாவின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் இருந்து ஜேர்மனிக்கு எரிவாயு கொண்டு செல்லும் நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் டென்மார்க்கிற்கு அருகில் உள்ள கடல் பகுதியில் திங்கட்கிழமை கசிய தொடங்கியதாக கண்டறியப்பட்டதை தொடர்ந்து அந்த பகுதியில் மிகப் பெரிய வெடிப்பு பதிவு செய்யப்பட்டது.
இந்த வெடிப்பிற்கு ரஷ்யாவின் திட்டமிட்ட தாக்குதலே காரணம் என பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் குற்றம் சாட்டிய நிலையில், அதனை கணிக்கக்கூடியது மற்றும் முட்டாள்தனமானது என ரஷ்யா பதிலளித்து இருந்தது.
இந்நிலையில், வியாழனன்று செய்தியாளர்களை சந்தித்த ரஷ்யாவின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், நோர்ட் ஸ்ட்ரீம் குழாயை சேதப்படுத்திய பயங்கரவாத செயல் சில நாடுகளின் தலையீடு இல்லாமல் நடந்திருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் நோர்ட் ஸ்ட்ரீம் குழாய் கசிவுகள் பற்றிய விசாரணையில் ஒத்துழைப்பு முக்கியமானது, ஆனால் இது தொடர்பான சிறப்பு சேவைகளில் ரஷ்யா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் கணிசமான தொடர்புகளை கொண்டிருக்கவில்லை என என அடிக்கோட்டி காட்டினார்.
கூடுதல் செய்திகளுக்கு: பிரித்தானியாவில் தென்பட்ட கில்லர் ஆசிய ஹார்னெட்ஸ்: தேனீ வளர்ப்பாளர்களுக்கு எச்சரிக்கை
இது போன்ற முக்கியமான பிரச்சனைகளில் மாஸ்கோவை தொடர்பு கொள்ள பல நாடுகள் தயாராக இல்லை என்பது விசித்திரமானது, அத்துடன் இவை தகவல் தொடர்பு இல்லாததை காட்டுகிறது என தெரிவித்துள்ளது.