போப் பிரான்சிஸ் மறைவால் மிகுந்த வேதனையடைகிறேன்: பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸின் மறைவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
போப் பிரான்சிஸ்
உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த போப் பிரான்சிஸ், உடல்நலம் சீரானதால் வீடு திரும்பிய நிலையில் வத்திக்கானில் காலமானார்.
அவரது மறைவிற்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தனது இரங்கலை தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
மிகுந்த வேதனை அடைகிறேன்
அதில், "புனித திருத்தந்தை பிரான்சிஸின் மறைவால் மிகுந்த வேதனை அடைகிறேன். இந்த துயரமான மற்றும் நினைவுகூரும் நேரத்தில், உலகளாவிய கத்தோலிக்க சமூகத்திற்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களால் இரக்கம், பணிவு மற்றும் ஆன்மீக தைரியத்தின் கலங்கரை விளக்கமாக போப் பிரான்சிஸ் எப்போதும் நினைவுக்கூறப்படுவார். சிறு வயதிலிருந்தே, அவர் கர்த்தராகிய கிறிஸ்துவின் கொள்கைகளை உணர்ந்து கொள்வதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.
ஏழைகளுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் விடாமுயற்சியுடன் சேவை செய்தார். துன்பப்படுபவர்களுக்கு அவர் நம்பிக்கையின் உணர்வைத் தூண்டினார். அவருடனான எனது சந்திப்புகளை நான் அன்புடன் நினைவுகூருகிறேன்.
மேலும் உள்ளடக்கிய மற்றும் விரிவான வளர்ச்சிக்கான அவரது உறுதிப்பாட்டால் பெரிதும் ஈர்க்கப்பட்டேன். இந்திய மக்கள் மீதான அவரது பாசம் எப்போதும் போற்றப்படும். கடவுளின் அரவணைப்பில் அவரது ஆன்மா நித்திய அமைதியைக் காணட்டும்" என தெரிவித்துள்ளார்.
Deeply pained by the passing of His Holiness Pope Francis. In this hour of grief and remembrance, my heartfelt condolences to the global Catholic community. Pope Francis will always be remembered as a beacon of compassion, humility and spiritual courage by millions across the… pic.twitter.com/QKod5yTXrB
— Narendra Modi (@narendramodi) April 21, 2025
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |