பாகிஸ்தான் கேட்டதாலேயே 'ஆபரேஷன் சிந்தூர்' நிறுத்தப்பட்டது! ட்ரம்பின் அழைப்பை நிராகரித்த மோடி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் அழைப்பை, பல்வேறு அலுவல்களை மேற்கோள் காட்டி பிரதமர் நரேந்திர மோடி மறுத்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் உடன் உரையாடல்
கனடா பயணத்தை முடித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, "ஆபரேஷன் சிந்தூர்" குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
இந்த உரையாடல் சுமார் 35 நிமிடங்கள் நடந்ததாக வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
மேலும், தலைவர்களின் உரையாடலின்போது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை கைவிடப்பட்டதற்கு காரணம் பாகிஸ்தானின் வேண்டுகோளினால்தான் எனவும், அமெரிக்காவின் வர்த்தக ஒப்பந்தம் காரணம் அல்ல எனவும் மோடி கூறியுள்ளார்.
உச்சிமாநாட்டிற்கு இந்தியா வர அழைப்பு
அத்துடன் கனடா பயணத்தை முடித்துக்கொண்டு இந்திய திரும்பியதும், அமெரிக்காவிற்கு வருமாறு பிரதமர் மோடியை அழைத்ததாகவும், அதற்கு பல்வேறு அலுவல்களை மேற்கோள்காட்டி ட்ரம்பின் அழைப்பை அவர் நிராகரித்துவிட்டதாகவும் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
எனினும், Quad உச்சிமாநாட்டிற்கு இந்தியா வர ட்ரம்பை பிரதமர் மோடி அழைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |