சுற்றுலா சென்றபோது மாயமான பிரித்தானிய சிறுமி வழக்கு: வெளியாகியுள்ள புதிய தகவல்
போர்ச்சுகல் நாட்டில் காணாமல் போன பிரித்தானியச் சிறுமி குறித்த புதிய தகவல் ஒன்று உலாவரத்துவங்கியுள்ளது.
சுற்றுலா சென்றபோது மாயமான பிரித்தானிய சிறுமி
2007ஆம் ஆண்டு, போர்ச்சுகல் நாட்டுக்கு சுற்றுலா சென்றபோது தங்கள் மகளான மேட்லின் மெக்கேன் என்னும் மூன்று வயதுச் சிறுமியை தவறவிட்டார்கள் கேட் மற்றும் கெர்ரி மெக்கேன் என்னும் பிரித்தானியத் தம்பதியர்.
பிரித்தானியா, ஜேர்மனி, போர்ச்சுகல் என மூன்று நாடுகளின் பொலிசார் இத்தனை ஆண்டுகளாக விசாரித்தும் மேட்லின் எங்கிருக்கிறாள், அவள் உயிருடன் இருக்கிறாளா, அவள் கொல்லப்பட்டுவிட்டாள் என்றால் கொலையாளி யார் என எந்த விடயமும் இதுவரை தெரியவரவில்லை.
வெளியாகியுள்ள புதிய தகவல்
இந்நிலையில், மேட்லின் குறித்த புதிய செய்தி ஒன்று பரவிவருகிறது.
அதாவது, மேட்லின் மாயமானதன் பின்னால் ஒரு பிரித்தானியரும் அவரது மனைவியான ஜேர்மன் பெண்ணொருவரும் உள்ளதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.
குடிபோதையில் கார் ஓட்டிய அந்தப் பெண் ஒரு குழந்தை மீது காரை ஏற்றிக் கொன்றுவிட்டதாகவும், மனைவியைக் காப்பாற்ற, அந்தக் குழந்தையின் உடலை அந்தப் பெண்ணின் கணவர் கடலில் வீசிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
அந்தக் குழந்தை மேட்லின் என சந்தேகிக்கப்படும் நிலையில், பொலிசார் அது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
மேட்லின் காணாமல்போய் 18 ஆண்டுகளுக்குப் பிறகு, சமீபத்தில் கிடைத்த தகவல் ஒன்றின்பேரில் மீண்டும் அவள் காணாமல்போன இடத்தின் அருகே பொலிசார் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |