பொறியியல் கலந்தாய்வு தள்ளிப்போக வாய்ப்பு
உயர்கல்வி துறை அமைச்சரான பொன்முடி மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறாமல் இருப்பதால், பொறியியல் கலந்தாய்வு பிற்போட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு தரவரிசை பட்டியலை கிண்டி தொழில்நுட்ப கல்வி இயக்கத்தில் வெளியிட்டார்.
நீட் தேர்வு முடிவுகள் வெளியாகினாலும், கலந்தாய்வு தொடங்கவில்லை.
மேலும் மருத்துவத்தை படிக்க விரும்பும் மாணவர்கள் பொறியியலை படித்து, பின் விலகி மருத்துவத்தை படிப்பது அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும்.
ஆகவே மருத்துவ கலந்தாய்வு முதல் ஆரம்பிக்கப்பட்டு பின் பொறியியல் கலந்தாய்வை ஆரம்பிக்கலாம் என திட்டமிட்டதுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |