இந்தோனேசியாவை உலுக்கிய சக்திவாய்ந்த பூகம்பம்! கிராமங்களை விட்டு வெளியேறிய மக்கள்.. 6 பேர் பலி
இந்தோனேசியாவின் பிரதான ஜாவா தீவின் கடற்கரையில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 6 பேர் பலியானதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவின் ஜாவா தீவின் கடற்கரையில் சனிக்கிழமை மதியம் 2 மணிக்கு 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.
கிழக்கு ஜாவாவில் மலாங் நகரிலிருந்து தென்மேற்கே 45 கிலோமீட்டர் தொலைவில் 82 கிலோமீட்டர் (50 மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 6 பேர் பலியானதாகவும், பல கட்டிடங்கள் சேதடைந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தை தொடர்ந்து கிழக்கு ஜாவாவில் உள்ள பல கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டதாக தேசிய பேரிடர் மேலாண்மை செய்தித் தொடர்பாளர் ராதித்யா ஜாதி கூறினார்.
#UPDATE At least six people were killed after a 6.0 magnitude quake struck off the coast of Indonesia's main Java island, its disaster agency said Saturday, as the country reels from a cyclone disaster in another part of the archipelagohttps://t.co/TB4qENuQie pic.twitter.com/R1yCePfb1e
— AFP News Agency (@AFP) April 10, 2021