"நான் நாட்டின் ஜனநாயகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டேன்"- ஜனாதிபதியாக நாட்டு மக்களுக்கு முதல் உரை ஆற்றிய அநுர

Election Commission of Sri Lanka Anura Kumara Dissanayaka President of Sri lanka Sri Lanka Presidential Election 2024
By Kirthiga Sep 23, 2024 06:56 AM GMT
Report

இலங்கையின் பெரும்பான்மையான மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நாட்டு மக்களுக்காக முதல் உரையை ஆற்றியுள்ளார்.

50 வருட முயற்சியின் பின் ஜனாதிபதி பதவியை பிடித்த JVP: இந்தியா- இலங்கை உறவில் சிக்கல்

50 வருட முயற்சியின் பின் ஜனாதிபதி பதவியை பிடித்த JVP: இந்தியா- இலங்கை உறவில் சிக்கல்

இலங்கை சோசலிச குடியரசின் புதிய ஜனாதிபதி

இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஒன்பதாவது ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க மக்களால் தேர்வு செய்யப்பட்டு, சற்று முன்னர் அதிகாரப்பூர்வமாக கொழும்பு காலிமுகத்திடலில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்தில் பதவி பிரமாணம் செய்துக்கொண்டார்.

"நான் நாட்டின் ஜனநாயகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டேன்"- ஜனாதிபதியாக நாட்டு மக்களுக்கு முதல் உரை ஆற்றிய அநுர | President Anura Kumara Dissanayake First Speech

இலங்கை ஜனாதிபதி தேர்தல் கடந்த சனிக்கிழமை (21) முடிந்த உடனே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

இரவு முழுவதும் தொடர்ந்த வாக்கு எண்ணிக்கையின் இறுதி முடிவுகள் நேற்றைய தினம் இரவு 7.30 மணியளவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன.

அதனப்படையில், இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க பெரும்பான்மையான மக்களால் தேர்வு செய்யப்பட்டார்.

"நான் நாட்டின் ஜனநாயகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டேன்"- ஜனாதிபதியாக நாட்டு மக்களுக்கு முதல் உரை ஆற்றிய அநுர | President Anura Kumara Dissanayake First Speech

தற்போது இலங்கை சோசலிச குடியரசின் புதிய ஜனாதிபதியாக பதிவி பிரமாணம் செய்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 5,740,179 வாக்குகளை பெற்று வெற்றிப்பெற்றார்.

இந்நிலையில் காலை 10 மணியளவில் நிகழ்ந்த பதவி பிரமாண நிகழ்ச்சியில், நாட்டு மக்களுக்காக இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது முதல் உரையை ஆற்றியுள்ளார்.

"நான் நாட்டின் ஜனநாயகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டேன்"- ஜனாதிபதியாக நாட்டு மக்களுக்கு முதல் உரை ஆற்றிய அநுர | President Anura Kumara Dissanayake First Speech

ஜனாதிபதியாக நாட்டு மக்களுக்கு ஆற்றிய முதல் உரை

“நமது நாட்டின் ஜனநாயகத்தின் மிக முக்கியமான அம்சம், நாட்டின் ஆட்சியாளரை பொது மக்களால் தேர்ந்தெடுப்பது தான். ஆனால் ஜனநாயகம் என்பது வெறும் வாக்குகளை அளிப்பதோ அல்லது ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதோ அல்ல.

இலங்கையின் 9-வது ஜனாதிபதியாக அநுர சற்றுமுன் பதவிப் பிரமாணம்

இலங்கையின் 9-வது ஜனாதிபதியாக அநுர சற்றுமுன் பதவிப் பிரமாணம்

கட்டமைப்புகள் மற்றும் வலுவான சட்டங்களை இன்னும் கொஞ்சம் வலுப்படுத்த வேண்டும் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். எனவே, நான் ஜனாதிபதியாக இருக்கும் போது நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான எனது அதிகபட்ச அர்ப்பணிப்பை வெளிப்படுத்தத் தயாராக இருக்கிறேன் என்று முதலில் பொதுமக்களுக்கு உறுதியளிக்கிறேன்."

"நான் நாட்டின் ஜனநாயகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டேன்"- ஜனாதிபதியாக நாட்டு மக்களுக்கு முதல் உரை ஆற்றிய அநுர | President Anura Kumara Dissanayake First Speech

மேலும் பதவி விலகும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பொது மக்களின் ஆணையை இன்பமாக ஏற்று ஜனநாயகத்தை மதித்து அதிகாரத்தை மாற்றுவதற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியமைக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த புதிய நிறைவேற்று ஜனாதிபதி, “மிகவும் சவாலான ஒரு நாட்டை நாம் கையகப்படுத்துகிறோம் என்பதை ஆழமாக புரிந்து கொண்டுள்ளோம். எங்களிடம் இருந்து பொதுமக்கள் எதிர்பார்க்கும் சாதகமான அரசியல் கலாசாரத்தை நாட்டில் உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதற்காக நாங்கள் அர்பணித்து செயற்பட தயாராக இருக்கிறோம். அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் மீது பொதுமக்களின் நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்த எங்கள் தரப்பிலிருந்து சாத்தியமான அனைத்தையும் செய்வோம்" எனவும் கூறியுள்ளார்.

இதேவேளை, புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி நாட்டின் நலனுக்காக சர்வதேச சமூகங்களுடன் இணைந்து செயற்படுவதற்கான தனது எதிர்பார்ப்பு குறித்தும் கருத்து வெளியிட்டார்.

“நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவர ஒவ்வொரு குடிமகனின் ஆதரவையும் நான் எதிர்பார்க்கிறேன். ஆனால் அந்த நோக்கத்திற்காக ஜனாதிபதி என்ற வகையில் எனது பொறுப்பை அர்ப்பணிப்புடன் நிறைவேற்றுவேன் என்று மக்களுக்கு நான் எப்போதும் உறுதியளிக்கிறேன். 

எங்களுக்கு சர்வதேச ஆதரவு தேவை என்பதை நான் அறிவேன். எனவே, அதிகாரப் பிளவுகள் இருந்தாலும் எமது நாட்டுக்கு அதிக நன்மை பயக்கும் வகையில் ஏனைய நாடுகளுடன் இணைந்து செயற்பட எதிர்பார்க்கின்றோம்.

நாங்கள் உலகின் மற்ற நாடுகளுடன் இணைந்து முன்னேற வேண்டிய நாடாக இருக்க வேண்டும். அதற்குத் தேவையான முடிவுகளை எடுக்க நாங்கள் தயங்க மாட்டோம்” என்று அவர் கூறினார்.


இறுதியாக, “நான் நாட்டின் ஜனநாயகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டேன் என்று சொல்ல வேண்டும். மக்கள் எனக்கு வாக்களித்துள்ளனர். எனக்கு வாக்களிக்காதவர்களும் உள்ளனர். எங்களின் வெற்றியின் அளவு குறித்து எங்களுக்கு தெளிவான புரிதல் உள்ளது.

இந்த காலக்கட்டத்திற்குள் எங்கள் மீது நம்பிக்கை இல்லாத பொதுமக்களின் நம்பிக்கையை வளர்ப்பதே எனது பொறுப்பு. அந்த நோக்கத்தில் நான் வெற்றியடைவேன் என்று உறுதியாக நம்புகிறேன்” என்று அநுர திஸாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

"நான் நாட்டின் ஜனநாயகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டேன்"- ஜனாதிபதியாக நாட்டு மக்களுக்கு முதல் உரை ஆற்றிய அநுர | President Anura Kumara Dissanayake First Speech

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Oshawa, Canada

27 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு கிழக்கு, கொழும்பு, London, United Kingdom

26 Feb, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சிலாபம், Scarborough, Canada

27 Feb, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சூரிச், Switzerland

05 Mar, 2021
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், Barrie, Canada

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, ெங்காளன், Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கைதடி, Wellington, New Zealand, சிட்னி, Australia

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி, நாவற்குழி கிழக்கு

10 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, கொழும்பு, உரும்பிராய், Toronto, Canada

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US