சீன உளவாளியுடன் பிரித்தானிய இளவரசி: வெளியான புகைப்படம்
பிரித்தானியாவில், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கணவர் சீனாவுக்காக உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள விடயம் பரபரப்பை உருவாக்கிவருகிறது.
இந்நிலையில், இளவரசர் ஆண்ட்ரூவின் மகளான இளவரசி பீட்ரைஸ் அந்த சர்ச்சைக்குரிய நபருடன் காணப்படும் புகைப்படும் ஒன்று வெளியாகியுள்ளது!
நாடாளுமன்ற உறுப்பினரின் கணவர் கைது
East Kilbride and Strathaven என்னும் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோனீ ரீட் (Joani Reid).

ஜோனியின் கணவர் டேவிட் டெய்லர் (David Taylor). இந்நிலையில், புதன்கிழமையன்று, சீனாவுக்கு உளவு பார்த்தததாக சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் டேவிட்.

அதைத்தொடர்ந்து, ஜோனி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இப்படி பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கணவர் சீனாவுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ள விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ள நிலையில், கூடுதலாக மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.
சீன உளவாளியுடன் பிரித்தானிய இளவரசி
ஆம், ஏற்கனவே ராஜகுடும்பத்தில் பெரும் சர்ச்சைக்கு காரணமானவரான இளவரசர் ஆண்ட்ரூவின் மகளான இளவரசி பீட்ரைஸ், சீன உளவாளி என கருதப்படும் டேவிடுடன் காணப்படும் புகைப்படம் ஒன்று வெளியாகி இளவரசிக்கு கூடுதல் சிக்கலை உருவாக்கியுள்ளது.

அதாவது, இளவரசி பீட்ரைஸ் அறங்காவலராக இருக்கும் Franks Family Foundation என்னும் தொண்டு நிறுவனம் சார்பில், 2016ஆம் ஆண்டு சிலர், இலவச சிகிச்சையளித்து வரும் நேபாள கண் மருத்துவர் ஒருவரை சந்திக்கச் சென்றுள்ளார்கள்.
அந்த சிலரில் இளவரசி பீட்ரைஸும் ஒருவர். அந்த தொண்டு நிறுவனத்தின் கொள்கை ஆலோசகர்களில் டேவிடும் ஒருவர். என்றாலும், பீட்ரைஸுக்கு டேவிடை தெரியாது என்றும், அந்த பயணத்துக்குப் பிறகு அவர் டேவிடை சந்தித்ததில்லை என்றும் Franks தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேபோல, டேவிடின் கைது தங்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாகவும் Franks தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |