பலமுறை ஏமாற்றப்பட்டேன், கடவுள் நீதி வழங்குவார் - கிரிக்கெட் வீரரின் வருங்கால மனைவி பதிவு
பலமுறை ஏமாற்றப்பட்டேன் என கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷாவின் வருங்கால மனைவி வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்வி ஷா
மஹாராஷ்டிராவை சேர்ந்த பிரித்வி ஷா, கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடியதால் மூலம் இந்திய அணியில் அறிமுகமானார்.

2021 ஆம் ஆண்டுக்கு பிறகு தேசிய அணியில் இடம் கிடைக்காத நிலையில், 2026 ஐபிஎல் தொடரில் அவரது முந்தைய அணியான டெல்லி அணியால் வாங்கப்பட்டார்.
26 வயதான பிரித்வி ஷாவிற்கு கடந்த மார்ச் மாதம், நடிகை மற்றும் சமூக வலைத்தள இன்ஃப்ளூயன்சரான அகிருதி அகர்வால் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

பலமுறை ஏமாற்றப்பட்டேன்
இந்நிலையில், அகிருதி அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில், "நான் பலமுறை ஏமாற்றப்பட்டுள்ளேன். இருந்தும் நான் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. ஒரு படி மேலே சென்ற பிறகும் இன்னும் என்னால் அதனை நம்ப முடியவில்லை.

எல்லாமே உண்மைதான். வெளியாகும் ஒவ்வொரு வதந்தியும் உண்மைதான். அவரைப் பற்றி நீங்கள் சமூக வலைத்தளங்களில் பார்ப்பது அத்தனையும் உண்மை" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதில் அவர் யார் பெயரையும் குறிப்பிடாமல் பதிவிட்டிருந்தாலும் சமூகவலைத்தளங்களில் பலரும் பிரித்வி ஷா ஏமாற்றி விட்டாரா என விவாதித்து வந்தனர்.
ஆனால், அகிருதி அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்களை நீக்கவோ, அவரை அன் ஃபாலோ செய்யவோ இல்லை.
இந்நிலையில் இன்று ஸ்டோரியில் மற்றொரு பதிவில், "பலராலும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது" என பதிவிட்டுள்ளார்.
அதைத்தொடர்ந்து, நான் எந்த பெயரையும் குறிப்பிடவில்லை. ஆனால் அது என வருங்கால கணவர் என தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. நாங்கள் பிரியவோ எங்கள் நிச்சயதார்த்தம் ரத்து செய்யப்படவில்லை . நாங்கள் ஒன்றாக மகிழ்ச்சியாக உள்ளோம்.

நான் இதை விளக்கமளிக்க வேண்டும் என பதிவிடவில்லை. ஆனால் எனது வாழ்க்கை துணையின் பெயர் களங்கத்திற்கு உள்ளாகும் போது என்னால் அமைதியாக இருக்க முடியாது. அவர் தான் என் வாழ்க்கை. ஆனால் அவர் மட்டும் என் வாழ்க்கையில் இல்லை. எனக்கு குடும்பம், நண்பர்கள் உள்ளனர்.
அந்த பதிவு என் நெருங்கிய நண்பர்களுக்கானது, ஆனால் ஒரு சிறிய தவறு அவரின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்திவிட்டது.
நான் இந்த பதிவு யாருக்கானது என வெளிப்படுத்த போவதில்லை. எனக்கு கர்மா மீது நம்பிக்கை உள்ளது. கடவுள் சரியான நேரத்தில் நீதி வழங்குவார்" என குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |