PUBG போதைக்கு அடிமையான இளைஞர்! நிஜ வாழ்க்கையில் விளையாடி குடும்பத்தினர் 4 பேர் சுட்டு கொலை!
பாகிஸ்தானில் ஒரு இளைஞன் தனது சகோதரர், சகோதரி உட்பட வீட்டிலிருந்த 4 பேரை PUBG விளையாட்டின் பாணியில் சுட்டு கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் பாகிஸ்தான் தலைநகர் லாகூரில் Nawa Kot அருகில் நடந்துள்ளது. பிலால் எனும் அந்த இளைஞர் PUBG விளையாட்டுக்கு அடிமையாகி வந்துள்ளார்.
இதனால் அவரது குடும்பத்தினர் அவரை கண்டித்து விளையாட விடாமல் தடுத்துள்ளனர்.
இதனால் ஆத்திரம் கொண்ட பிலால், PUBG விளையாட்டில் வருவது போலவே ஹெல்மெட், ஜாக்கெட் மற்றும் உடைகளை அணிந்துகொண்டு துப்பாக்கியை எடுத்துவந்துள்ளார்.
அந்த நேரத்தில் வீட்டில் இருந்த அவரது சகோதரி, சகோதரர், அண்ணி மற்றும் நண்பர் ஆகிய 4 போரையும் கண்மூடித்தனமாக சுட்டு கொலை செய்துள்ளார்.
துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தகவல் கொடுத்தத்தையடுத்து, பிலால் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இந்த கொடூரமான சம்பவம் வீட்டிலிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது என பொலிஸ் தெரிவித்துள்ளது.
சம்பவம் நடந்த நேரத்தில் பிலால் 'Ice' ( crystal meth) எனப்படும் போதை பொருளை உட்கொண்டதாகவும், அவர் அந்த போதைக்கு அடிமையானவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த பிலாலின் தாயார் தற்போது ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு தனது மனைவியை விவாகரத்து செய்த பிலால், கைது செய்யப்பட்ட பின்னர் நான்கு கொலைகளையும் ஒப்புக்கொண்டதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தில் விசாரணை நடந்து வருகிறது. PUBG போதை காரணமாக பல இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து 2020-ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் அந்த விளையாட்டு தடைசெய்யப்பட்டது.
இருப்பினும், பின்னர் ஒரு சமூக ஊடக சலசலப்பு காரணமாக தடை நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.