மணலில் புதைந்த கிராமம்: ஆட்சியாளருக்கு வானொலி நிகழ்ச்சியில் பொதுமக்கள் கோரிக்கை
ஆட்சியாளர் ஷேக் சுல்தான் பின் முகமது அல் காசிமி ஒவ்வொரு வாரமும் ஷார்ஜா வானொலி நிகழ்ச்சியில் பங்கேற்று பொதுமக்களிடம் நேரடியாகப் பேசுவார்.
வானொலி நிகழ்ச்சியில் பொதுமக்கள் கோரிக்கை
அவ்வாறு புதன்கிழமை வானொலி நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியாளர், சார்ஜாவின் மடம் அருகே நாங்கள் வாழ்ந்த குறைபா கிராமத்தை ஒரு குடிமகன் மீட்டெடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
மணல் புயலால் கிராமம் புதையுண்டதாகத் தெரிகிறது. அதனை மீட்டெடுத்தால் மீண்டும் அந்தப் பகுதியில் எங்களின் வாழ்க்கையைத் தொடர உதவியாக இருக்கும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
James Kerwin
இந்த கோரிக்கையை தொடர்ந்து, புதையுண்ட கிராமத்தை சீரமைக்க அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். இந்நிலையில், இதையடுத்து கிராம பகுதியில் சீரமைப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஷார்ஜாவின் புதைக்கப்பட்ட கிராம்:
1,30,000 ஆண்டுகளுக்கு முன்பே ஷார்ஜாவில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களை தொல்பொருள் ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. இத்தகைய பழம்பெரும் பகுதியில் ஆச்சரியங்களும் மர்மங்களும் இருப்பது இயற்கையே. துபாயிலிருந்து 60 கிமீ தொலைவிலும், ஷார்ஜாவிலிருந்து 50 கிமீ தொலைவிலும் அல் மடம் என்ற பாலைவனப் பகுதி உள்ளது. குராபா கிராமம் இங்கிருந்து தென்மேற்குப் பகுதியில் சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ளது.
Fredods/Shutterstock
ஒரு காலத்தில் அழகிய கிராமமாக இருந்த இப்பகுதியில் மனித நடமாட்டம் இல்லை என்பது மர்மமாக உள்ளது. ஏனெனில் தற்போது இந்த கிராமம் முழுவதும் மணலில் புதைந்து கிடக்கிறது. மணலில் புதைந்த கட்டிடங்களின் மேற்கூரைகள் மட்டுமே தெரியும்.
கடந்த 1970 மற்றும் 1980-களில், இந்த கிராமத்தின் கட்டிடங்கள் அரசாங்கத்தால் வீட்டுத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டன. ஆனால் அடுத்த 10 ஆண்டுகள் மட்டுமே கிராம மக்களின் வாழ்க்கை அமைதியாக இருந்தது. இதையடுத்து அந்த பகுதியில் தொடர்ந்து மணல் புயல் வீச தொடங்கியது.
expatpanda
அப்போது மணல் புயல் வீடுகள் மற்றும் கட்டிடங்களை வெள்ளம் போல் தாக்கியது. இதனால் கிராமம் முழுவதும் மணலில் புதையுண்டது.
கிராம மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து ஊரை காலி செய்தனர். இன்று அப்பகுதிக்கு சென்றால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் மணலில் மூழ்கியிருப்பதை காணலாம். மேலும் அங்கு வசித்த மக்கள் விட்டுச் சென்ற பொருட்களும் சேதமடைந்துள்ளன.
தற்போது இந்த பகுதி சுற்றுலா தலமாக மாறியுள்ளது. பகலில் இப்பகுதிக்கு வாகனத்தில் செல்பவர்கள் இரவில் செல்வதில்லை.
மர்மங்கள் நிறைந்த கிராமமாக இருந்த இப்பகுதி, தற்போது ஆட்சியரின் உத்தரவால் புதுப்பொலிவு பெறவுள்ளது.
Ghost Village, Al Madam, Sharjah Village, Buried Village
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |