உக்ரைன் போருக்காக மொத்தத்தையும் மாற்றும் புடின்: பதவியில் இருந்து முக்கிய தளபதி நீக்கம்!
ரஷ்ய ராணுவ தளபதி டிமிட்ரி புல்கோவ்-வை பதவியில் இருந்து நீக்கினார் ஜனாதிபதி புடின்.
ஜெனரல் புல்கோவ் 2008 முதல் இராணுவத்தின் தளவாட நடவடிக்கைகளை நடத்தி வருகிறார்.
உக்ரைன் போரில் ராணுவ தளவாட நடவடிக்கைகளை நிர்வகித்த ராணுவ ஜெனரல் டிமிட்ரி புல்கோவ்-வை( Dmitry Bulgakov) அவரது பதவியில் இருந்து ரஷ்ய ஜனாதிபதி புடின் நீக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையில் இரு நாடுகளும் தங்களது இலக்குகளில் தீவிரமாக இருந்து வருவதால், போர் நடவடிக்கை 7 மாதங்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
GETTY IMAGES
உக்ரைனிய படைகளின் சமீபத்திய எதிர்ப்பு தாக்குதலால், ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பெரும்பாலான பொது மக்கள் குடியிருப்பு விடுவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய படையினர் இந்த பின்னடைவால் ரஷ்ய ஜனாதிபதி புடின், இரண்டாம் உலக போருக்கு பிறகு முதல் முறையாக படை அணி சேர்ப்பை ரஷ்யாவில் அறிவித்தார்.
மேலும் ரஷ்ய படைகளின் இந்த பின்னடைவிற்கு ஆயுதங்கள் பரிமாறப்படும் தளவாட நடவடிக்கையில் ஏற்பட்ட குழப்பங்கள் மற்றும் தாமதங்களே காரணம் என குற்றம் சாட்டப்பட்டு வந்தது.
இந்நிலையில், ரஷ்யாவின் இராணுவ தளவாட நடவடிக்கைகளை நிர்வகித்த ராணுவ ஜெனரல் டிமிட்ரி புல்கோவ்-வை சனிக்கிழமை அவரது பதவியில் இருந்து ரஷ்ய ஜனாதிபதி புடின் நீக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான தகவலை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் டெலிகிராம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது, அதில் 67 வயதான ராணுவ ஜெனரல் டிமிட்ரி புல்கோவ் புதிய பாத்திரத்திற்கு மாற்றுவதற்காக விடுவிக்கப்பட்டார் என்றும் அவருக்குப் பதிலாக கர்னல் ஜெனரல் மிகைல் மிஜின்ட்சேவ் மரியுபோல் தாக்குதலை நிர்வகிப்பார் எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: 9 வயது இந்திய பெண்ணை வாழ்த்திய ஆப்பிள் CEO: IOS செயலியை உருவாக்கி அசத்தல்
ஜெனரல் புல்கோவ் 2008 முதல் இராணுவத்தின் தளவாட நடவடிக்கைகளை நடத்தி வருகிறார், மேலும் 2015 இல் சிரியாவிற்கு அனுப்பப்பட்ட பின்னர் ரஷ்ய துருப்புக்களை வழங்குவதற்கான பொறுப்பை பெற்றார்.