ஐரோப்பாவையே சுட்டெரிக்கப் போகும் புடினின் கோபம்! அடுத்து என்ன?(காணொளி)
ரஷ்யா மீது நேற்றைய தினம் உக்ரைன் மேற்கொண்ட தாக்குதல் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இதில் ரஷ்யாவின் 40க்கும் அதிகமான விமானங்கள் தாக்கி அழிக்கப்பட்டன. குறிப்பாக, அணுகுண்டுகளை வீசுவதற்கு பயன்படுத்தக்கூடிய விமானங்களும் இதில் அடக்கம் என்று கூறப்படுகிறது.
இப்படி விமானங்கள் பற்றி எரியும் காட்சிகள் உலக ஊடகங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்க, விளாடிமிர் புடினின் பதிலடி எப்படி அமையப்போகிறது என்ற அச்சம் ஐரோப்பிய மக்களை ஆட்கொண்டுள்ளது.
உக்ரைனின் இந்த ட்ரோன் தாக்குதலை இரண்டாம் உலக யுத்தத்தின்போது, சோவியத் ரஷ்யாவின் மீது ஜேர்மன் மேற்கொண்ட 'ஆபரேஷன் பார்பரோஸா'க்கு அடுத்ததாக ரஷ்யா மீது மேற்கொள்ளப்பட்ட பாரிய தாக்குதல் என வர்ணிக்கின்றனர்.
அதேபோல் உலக யுத்தத்தின்போது ஜப்பான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுடனும் இதனை ஒப்பிடுகின்றனர் சில ஆய்வாளர்கள்.
மேலதிக தகவல்களுக்கு காணொளியை காண்க