ஏர் இந்தியா விமான விபத்து: விபத்துக்கான காரணம் என்ன?
இந்தியாவின் குஜராத்திலிருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளாகியதில் விமானத்தில் பயணித்த ஒருவர் தவிர மற்ற அனைவரும் பலியாகிவிட்டார்கள்.
இந்நிலையில், விபத்துக்கான காரணம் என்னவாக இருந்திருக்கும் என்பது குறித்து விமானிகள் மற்றும் துறைசார் நிபுணர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள்.
விபத்துக்கான காரணம் என்ன?
Fuel metering system
மூத்த விமானி ஒருவர், விமானத்தின் fuel metering system என்னும் அமைப்பில் ஏற்பட்ட பிரச்சினை விபத்துக்குக் காரணமாக அமைந்திருக்கக்கூடும் என்கிறார்.
அதாவது, நாம் பயன்படுத்தும் மோட்டார்சைக்கிள், கார் போன்ற வாகனங்களில் உள்ளதுபோல, எரிபொருளை காற்றுடன் கலக்கும் இந்த அமைப்பில் அடைப்பு ஏற்பட்டிருந்தாலோ அல்லது எரிபொருளில் ஏதாவது கலந்திருந்தாலோ விமானத்தின் இரண்டு எஞ்சின்களும் பழுதாகக்கூடும், எஞ்சின்கள் செயலிழந்ததால் விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்று கூறியுள்ளார்.
பறவைகள்
விமான எரிபொருள் அமைப்பு தொடர்பான துறையில் மூத்த விரிவுரையாளராக பணியாற்றும் Dr Jason Knight என்பவர், விமானத்தில் எரிபொருள் அதிகம் இருந்ததால் விமானம் அதிக எடை காரணமாக விபத்துக்குள்ளாகியிருக்கும் என கூற முடியாது.
விமானம் மிகவும் தாழ்வாகப் பறந்ததால், விமானத்தை முறைப்படி தரையிறக்க விமானியால் முடியாமல் போயிருக்கலாம் என்றும், விமானத்தின் இரண்டு எஞ்சின்களும் பழுதானால்தான் விமானத்தால் பறக்கமுடியாத நிலை ஏற்படும் என்றும், அப்படி இரண்டு எஞ்சின்களும் பழுதாகவேண்டுமானால், பறவைகள் மோதியதால்தான் அப்படி ஆகியிருக்கமுடியும், அதனால் விபத்து ஏற்பட்டிருக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
Wing flaps
மேலும், விமானம் மேல் நோக்கி ஏறும்போதும், இறங்கும்போதும் அதற்கு உதவியாக இருக்கக்கூடிய பாகமான, விமானத்தின் இறக்கையில் உள்ள wing flaps என்னும் அமைப்புகள் சரியாக இயங்காமல் போயிருக்கலாம், அதனால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என மூன்று நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இப்படி பல்வேறு நிபுணர்கள் பல கருத்துக்களை கூறியுள்ள நிலையில், விமானத்தின் கருப்புப்பெட்டி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து எதனால் நடந்தது என்பதை அந்த கருப்புப்பெட்டியின் மூலம் அறிந்துகொள்வதற்கான முயற்சிகள் துவக்கப்பட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |