டெஸ்ட் கேப்டன் ரோகித் வேண்டாம்! இவர போடுங்க... சுனில் காவாஸ்கர் வலியுறுத்தல்
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சுனில் கவாஸ்கர், இந்திய அணிக்கு அடுத்த டெஸ்ட் கேப்டனாக யார் வரவேண்டும் என்ற தன்னுடைய கருத்தை கூறியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட கோலி தலைமையிலான இந்திய அணி அங்கு விளையாடிய 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-2 என்று தோல்வியை சந்தித்தது.
இதையடுத்து கோலி திடீரென்று தன்னுடைய கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். டி20, ஒருநாள் போட்டிகளைத் தொடர்ந்து கோலி தற்போது டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்தும் விலகியுள்ளார்.
இது கோலி ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் அடுத்த இந்திய அணியின் கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் கூறுகையில், கோலிக்கு பிறகு டெஸ்ட் அணிக்கு ரிஷப் பாண்ட்டை கேப்டனாக நியமிக்க வேண்டும்.
அணியை வெற்றிகரமாக முன்னோக்கி அழைத்துச் செல்வதற்கான ஆற்றல் இவரிடம் இருப்பதாக கூறியுள்ளார்.
ஆனால், ரோகித் சர்மா தான் டெஸ்ட் கேப்டன் ஆக வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.