ட்ரம்பின் எதிர்ப்பை மீறி... கரீபியன் நாடொன்றிற்கு விரையும் ரஷ்ய எண்ணெய் கப்பல்
ரஷ்ய போர்க்கப்பல் ஒன்றும், தடைசெய்யப்பட்ட எண்ணெய் கப்பலும் ஆங்கிலக் கால்வாய் வழியாக கியூபாவிற்கு விரைவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பல வாரங்களுக்கான
ரஷ்ய எண்ணெய் கப்பல் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்துள்ள நிலையில், அது கியூபா மீதான டொனால்ட் ட்ரம்பின் எண்ணெய் முற்றுகையை உடைக்க முடிவு செய்துள்ளதாகவே தெரிய வருகிறது.

மேலும், 48 மணி நேரம் ரஷ்ய கப்பல்களைக் கண்காணித்ததாகவும் பிரித்தானியாவின் ராயல் கடற்படை உறுதி செய்துள்ளது.
ரஷ்யாவின் RFN Soobrazitelny போர்க்கப்பலும், மேற்கத்திய நாடுகளின் தடைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள MV Anatoly Kolodkin எண்ணெய் கப்பலும் ஆங்கிலக் கால்வாய் வழியாகவே பயணப்பட்டுள்ளன.
ரஷ்யாவின் சுமார் 730,000 பீப்பாய் கச்சா என்ணெய் கியூபாவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் Kolodkin கப்பலின் இறுதி இலக்கு இன்னும் அறியப்படவில்லை.
இருப்பினும், அதில் கொண்டுச் செல்லப்படும் எண்ணெய் கியூபாவிற்கு பல வாரங்களுக்கான எரிசக்தியை வழங்கக்கூடும் என்றே கூறப்படுகிறது. தற்போது ஏற்பட்ட மின்சாரத் தடையால் அந்தத் தீவு பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது, இதன் காரணமாக தீவின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
பெரும் அழுத்தத்தால் பலவீனமான மின் கட்டமைப்பு செயலிழந்ததால், சுமார் பத்து மில்லியன் மக்கள் மின்சாரமின்றி தவிக்கின்றனர். வெனிசுலாவின் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்ததிலிருந்து, வெனிசுலாவிலிருந்து எண்ணெய் ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது, இது கியூபாவை நிலைகுலையச் செய்துள்ளது.

ட்ரம்ப் அச்சுறுத்தியதால்
எரிபொருள் பற்றாக்குறை, ஏற்கெனவே பலவீனமாக உள்ள மின்சார அமைப்பை நெருக்கடியின் விளிம்பிற்குத் தள்ளியுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக தீவிற்கு எந்த பெட்ரோலிய சரக்குகளும் வந்து சேரவில்லை என்றே கியூபா ஜனாதிபதி மிகுவல் தியாஸ்-கானெல் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ரஷ்யா அமெரிக்காவின் தடைகளை மீற முயன்றால், அது இரு வல்லரசு நாடுகளுக்கும் இடையே ஒரு சாத்தியமான நேரடி மோதலுக்கு வழிவகுக்கக்கூடும் என்றே கூறுகின்றனர்.

இதனிடையே, கடந்த மாதம், 'தி சீ ஹார்ஸ்' என்ற சீனாவிற்குச் சொந்தமான ரஷ்ய எண்ணெய்க் கப்பல், பீப்பாய்களில் எரிபொருளை ஏற்றிக்கொண்டு கியூபாவிற்குச் சென்று கொண்டிருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், மூன்று வாரங்களுக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் முடக்கப்பட்டது.
கியூபாவிற்கு எண்ணெய் விற்கும் எந்தவொரு நாட்டின் மீதும் வரி விதிப்பதாக ட்ரம்ப் அச்சுறுத்தியதால், அந்த கப்பல் இறுதியில் தன் போக்கை மாற்றிக்கொண்டது.
ட்ரம்பின் மிரட்டல் காரணமாக தற்போது கியூபாவில் மின்வெட்டு ஒரு அன்றாட நிகழ்வாகிவிட்டது, ஒரு நாளைக்கு 20 மணி நேரம் வரை மின்வெட்டு நீடிக்கிறது என்றே கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |