ரஷ்யா, அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தடைந்த 2 முக்கியமான கப்பல்கள்
ரஷ்யா மற்றும் அமெரிக்காவிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு கப்பல்கள் இந்தியாவிற்கு வந்தடைந்தது.
மத்திய கிழக்கில் நடைபெறும் அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் போரின் தாக்கத்தால் உலகளாவிய எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கப்பல்கள் இந்தியாவின் மங்களூரு துறைமுகத்திற்கு வந்துள்ளது.
ரஷ்யாவின் பிரிமோர்ஸ்க் துறைமுகத்திலிருந்து வந்த AquaTitan கப்பல் 96,000 மெட்ரிக் டன் கச்சா எண்ணெயை கொண்டு சனிக்கிழமை இரவு மங்களூருவிற்கு வந்தது. இந்த எண்ணெய் MRPL சுத்திகரிப்பு நிலையத்திற்கு வழங்கப்படுகிறது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் நெதர்லாந்து துறைமுகத்திலிருந்து வந்த 'Pyxis Pioneer' கப்பல் 16,000 மெட்ரிக் டன் LPG-ஐ கொண்டு ஞாயிற்றுக்கிழமை காலை மங்களூருவிற்கு வந்தது. இந்த எரிவாயு Aegis Gas சேமிப்பு ஆலைக்கு வழங்கப்பட்டது.

"கப்பல்கள் பாதுகாப்பாக வந்தடைந்துள்ளன. எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குதல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தேவையான பாதுகாப்பு நடவடிக்கைக்கள் எடுக்கப்பட்டுள்ளன" என்று மங்களூரு துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் மற்றும் எரிவாயு கடத்தலில் ஏற்பட்ட தடைகள் காரணமாக உலகளாவிய எரிசக்தி சந்தை சிக்கலை சந்தித்து வருகிறது.
இந்தியா தனது எரிசக்தி தூதரக திறன் மூலம் பல்வேறு நாடுகளிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு பெற்றுக்கொண்டு நிலைமையை சமாளித்து வருகிறது.
இந்த கப்பல்கள் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பிற்கு முக்கிய ஆதரவாக உள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Mangaluru Port Oil Shipment, Russia Crude Oil India 2026, US LPG Supply to India, Energy Crisis Middle East War #MangaluruPort #EnergySupply #RussiaOil