தானிய ஏற்றுமதியில் ஏற்பட்ட இடையூறுக்கு உக்ரைனே காரணம்: ரஷ்யா பகீர் குற்றச்சாட்டு
உக்ரைனில் இருந்து வெளிநாட்டு கப்பல்கள் வழியாக, தானிய ஏற்றுமதிக்கு உதவுவதற்கு ரஷ்யா தயாராக இருப்பதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சத்தின் செய்திதொடர்பாளர் மரியா ஜாகரோவா புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
உலகின் உணவுத் தானிய ஏற்றுமதியில் முக்கிய நாடாக விளங்கும் உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இருநாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர் மோதல்களால், டன் கணக்கான உணவுத் தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் தேங்கியுள்ளன.
இதனால் உலகின் பெரும்பாலான நாடுகளில் உணவு தானிய தட்டுப்பாடு ஏற்பட்டதுடன் மட்டுமில்லாமல், பல்வேறு உணவுப் பொருள்களின் விலையானது கடுமையாக உயர்ந்துள்ளது.
இந்தநிலையில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் செய்தியாளர்களை சந்தித்த ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா, உக்ரைனில் இருந்து உணவுத் தானியங்களை வெளிநாட்டு கப்பல்கள் வழியாக ஏற்றுமதி செய்வதற்கு ரஷ்யா உதவ தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் கருங்கடல் துறைமுகங்களில் இருந்து தானியங்களை ஏற்றுமதி செய்வதை ரஷ்யா ஒருபோதும் தடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும் பாதுகாப்பான செயல்பாட்டிற்கு தேவையான நிலைமைகள் தொடர்பாக கருங்கடல் மற்றும் அசோவ் கடல்களில் இரண்டு கடல்சார் மனிதாபிமான தாழ்வாரங்களை ரஷ்ய இராணுவம் உருவாக்கியுள்ளது என்றும் கூறினார்.
[0KJHPQ ]
தானிய ஏற்றுமதியில் ஏற்பட்ட இடையூறுக்கு உக்ரைன் அதிகாரிகளே காரணம் என ஜகாரோவா குற்றம் சாட்டினார்.
கூடுதல் செய்திகளுக்கு: காதலியை கொன்று புதைத்துவிட்டு...தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட காதலனால் பரபரப்பு!
மேலும் உக்ரைனின் கருங்கடல் மற்றும் அசோவ் கடல்களில் சுமார் 420 நங்கூர சுரங்கங்களை நிறுவியுள்ளது என்றும், அதனடிப்படையில் 16 நாடுகளை சேர்ந்த 70 வெளிநாட்டு கப்பல் நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.