உக்ரைனில் 4,00,000 டன் தானியங்களை வெளியேற்றிய ரஷ்யா: உணவுத்துறை அமைச்சகம் தகவல்!
உக்ரைனில் இருந்து கிட்டத்தட்ட 4,00,000 கிலோ டன் உணவு தானியங்களை ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றி இருப்பதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா போரானது 70வது நாளை தொட்டு இருக்கும் நிலையில், உக்ரைனில் ரஷ்ய படைகளின் அத்துமீறல்கள் மற்றும் வன்முறைகள் அதிகரித்து வருவதாக உக்ரைன் தொடர்ந்து குற்றங்சாட்டி வருகிறது.
அதே நேரத்தில், கோதுமை உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் இந்த போர் பதற்றத்தால், உலக அளவில் உணவு பொருள்கள் தட்டுபாடு மற்றும் பொருளாதார நெருக்கடியை எற்படுத்துவருகிறது.
#Russian occupiers removed about 400,000 tons of grain from the occupied territories of #Ukraine, reports the Ministry of Agrarian Policy and Food.
— NEXTA (@nexta_tv) May 4, 2022
This is almost a third of all grain reserves in the occupied regions. pic.twitter.com/ZfM5Zjgqh5
இந்த நிலையில், உக்ரைனில் ரஷ்ய ராணுவ படையினர் இதுவரை ஆக்கிரமித்து இருந்த பகுதிகளில் இருந்து கிட்டத்தட்ட 4,00,000 கிலோ டன் உணவு தானியங்களை அகற்றி இருப்பதாக உக்ரைனின் விவசாயக் கொள்கை மற்றும் உணவு அமைச்சகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: பிரித்தானியாவில் 120 விமான சேவைகள் ரத்து: பிரிட்டிஷ் ஏர்வேஸ் அதிரடி அறிவிப்பு!
இவை ரஷ்ய ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் சேமித்து வைக்கப்பட்ட தானிய இருப்பில் மூன்றில் ஒருபங்கு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.