மிக மோசமான நடவடிக்கைக்கு தயாராகும் ரஷ்யா... உக்ரைன் தொடர்பில் எச்சரிக்கும் அமெரிக்கா
கடந்த வார இறுதியில் உக்ரைனின் ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அச்சுறுத்தியது இன்னும் தீவிரமாக நடக்கவில்லை என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
உக்கிர நடவடிக்கை
ரஷ்யா முன்னெடுக்கும் தாக்குதல் மிக மோசமானதாகவும், பல முனைத் தாக்குதலாகவும் இருக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. முழு அளவிலான ரஷ்ய தாக்குதல் எப்போது என்பது உறுதிப்படுத்தப்படவில்லை என கூறப்படும் நிலையில்,
சில நாட்களுக்குள் ரஷ்யாவின் உக்கிர நடவடிக்கை எதிர்பார்க்கலாம் என்றும் சில வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது. ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் உட்பட பல முனைத் தாக்குதலாக இருக்கும் என்றே அமெரிக்க அதிகாரிகள் தரப்பு நம்புகின்றனர்.
மேலும், ரஷ்யாவின் இலக்கு தொடர்பில் விரிவாக குறிப்பிடவும் அமெரிக்க அதிகாரிகள் தயக்கம் காட்டியுள்ளனர். கடந்த வார இறுதியில் ரஷ்ய போர் விமானங்கள் மீதான உக்ரைன் தாக்குதல் போன்று இது இருக்காது என்றே அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டுகின்றனர்.
ஆனால் வெள்ளிக்கிழமை உக்ரைன் தலைநகர் மீது கடுமையான ட்ரோன் தாக்குதலை ரஷ்யா முன்னெடுத்திருந்தது. இதன் பின்னரே, அமெரிக்காவின் எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
40 விமானங்கள்
ரஷ்யாவின் முழுமையான பதிலடி அதுவல்ல என்றும், அது உக்கிரமாக இருக்கும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த ஞாயிறன்று திடீரென்று 117 ட்ரோன்களை கொத்தாக ஏவிய உக்ரைன் அதிரடியாக ரஷ்ய பிராந்தியத்தில் புகுந்து தாக்குதலை முன்னெடுத்தது.
ரஷ்யாவின் 20 போர் விமானங்கள் தாக்குதலுக்கு இலக்கானது. அதில் 10 மொத்தமாக சேதமடைந்தது என அமெரிக்கா தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி 40 விமானங்கள் சேதமடைந்ததாக குறிப்பிட்டிருந்தார்.
ஆபரேஷன் Spider's Web என பெயரிடப்படிருந்த இந்தத் தாக்குதலில் பெயரளவுக்கு மட்டுமே சேதம் ஏற்பட்டதாக ரஷ்யா குறிப்பிட்டிருந்தது. ஆனால் டசின் கணக்கான விமானங்கள் சேதமடைந்துள்ளதாக ரஷ்ய இராணுவ வலைப்பதிவர்கள் பேசியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |