உக்ரைன் தலைநகரில் ரஷ்யா ஏவுகணை, ட்ரோன் தாக்குதல் - பற்றியெரியும் நகரம்
உக்ரைனின் தலைநகர் கீவ் மீது ரஷ்யா இன்று (சனிக்கிழமை) அதிகாலை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தி பாரிய அளவில் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் குறைந்தது 8 பேர் காயமடைந்ததாக கீவ் நகர மேயர் வித்தாலி கிளிட்ஸ்கோ தெரிவித்துள்ளார்.
கீவ் நகரின் பல பகுதிகளில் வெடிவிசைகள் வீழ்ந்ததைத் தொடர்ந்து தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன. சமூக ஊடகங்களில் பதிவான வீடியோக்களில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் தீ விபத்துகள் ஏற்பட்டு புகை மூட்டமாக காட்சி அளிக்கின்றது.
சொலோமின்ஸ்கி மாவட்டத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் மேல்தளத்தில் ட்ரோன் துண்டுகள் வீழ்ந்தன.
ட்நிப்ரோவ்ஸ்கி மாவட்டத்தில் இரண்டு மாடிகளில் தீவிபத்து ஏற்பட்டது. ஒபோலோன் பகுதியில் வணிக மையம் மீது ட்ரோன் துண்டுகள் விழுந்தன.
வான்வழி தாக்குதலுக்கு எதிரான பாதுகாப்பு குழுக்கள் செயல்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்குப் பிறகு கீவ் முழுவதும் வான்வழி எச்சரிக்கை இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக அமுலில் இருந்தது.
இந்த தாக்குதல், உக்ரைன் கடந்த சில நாட்களில் ரஷ்யாவில் உள்ள இலக்குகளை நோக்கி மேற்கொண்ட 800 ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடியாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் வெள்ளிக்கிழமை, "எதிர்வினை வரும்" என எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Russia Ukraine drone attack 2025, Kyiv missile strike, Kyiv airstrike May 2025, Russia retaliates drone attacks, Kyiv apartment fire, Ukraine Russia war update, Kyiv news, Kyiv Dnipro missile debris, air alert Ukraine capital