உக்ரைன்-ரஷ்யா போரின் 43-வது நாள்: சமீபத்திய முக்கிய தகவல்கள்
Russia
Ukraine
Ukraine War
Ukraine Russia News
Ukraine Russia Latest News
By Ragavan
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 43-வது நாளாக தாக்குதல் நடத்திவரும் நிலையில், சமீபத்திய மிக முக்கியமான தகவல்களை இங்கே பார்ப்போம்.
உக்ரைன் போரின் பாரிய புதுப்பிப்புகள்:
- மாரியுபோல் நகரத்தில் இதுவரை 210 குழந்தைகள் உட்பட 5100 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக அந்நகர மேயர் வாடிம் போய்ச்சென்கோ தெரிவித்துள்ளார்.
- தலைநகர் கீவ் மற்றும் செர்னிஹிவில் இருந்து ரஷ்ய ராணுவம் வெளியேறியதாக பென்டகன் கூறியுள்ளது. கிழக்கு மண்டலத்தில் ரஷ்யா தனது ராணுவத்தை நிறுத்தியுள்ளது.

- Bucha நகரத்தில் ரஷ்ய தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டதை அடுத்து விளாடிமிர் புடினின் மகள்கள் மரியா வொரொன்ட்சோவா மற்றும் கத்தரினா திகோனோவா ஆகியோருக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியமும் அவர்கள் மீது தடை விதிப்பது குறித்து திட்டமிட்டுவ்ருகிறது.
- ஐரோப்பிய ஒன்றியம் பிரான்சில் கூடியது. இதில், ரஷ்ய எரிவாயு மற்றும் எண்ணெய்க்கு தடை விதிக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
- மரியுபோல் மனித வழித்தடத்தை (Human Corridor) ரஷ்யா மூடிவிட்டதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். தற்போது இங்கு 1.60 லட்சம் பேர் சிக்கியுள்ளனர்.

- புச்சாவில் ரஷ்ய இராணுவத் தாக்குதலுக்குப் பிறகு இடிபாடுகள் மற்றும் குப்பைகள் மட்டுமே காணக்கூடிய நிலையில், உக்ரேனிய நகரமான மரியுபோலின் 90% அடிப்படைக் கட்டமைப்புகள் ரஷ்ய தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளன.
- உக்ரைன் படைகள் தனது Kursk எல்லையில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அப்பகுதியில் மோட்டார்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக குர்ஸ்க் கவர்னர் கூறியுள்ளார்.
- புச்சா தாக்குதலுக்குப் பிறகு, மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்திற்கு (வியாழன்) இன்று ஐ.நா. அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்தின், வாக்கெடுப்பில் ரஷ்யா கவுன்சிலில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளது.

- பிரித்தானியா ரஷ்யா மீது அதிக தடைகளை விதித்துள்ளது, நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்பெர்பேங்கின் சொத்து பரிவர்த்தனைகளுக்கு முழுமையான தடை வைத்துள்ளது மற்றும் பிரித்தானியாவில் இருந்து ரஷ்யாவிற்கு செல்லும் அனைத்து முதலீடுகளையும் நிறுத்தியது.
- ரஷ்ய தாக்குதலை எதிர்கொள்ள உக்ரைன் ராணுவத்திற்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள ஜாவெலின் ஆயுத எதிர்ப்பு ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார்.

- உக்ரைனில் போர் தொடங்கியதில் இருந்து ஒவ்வொரு நாளும் எரிசக்தி தேவைகளுக்காக EU ரஷ்யாவிற்கு சுமார் 1 பில்லியன் யூரோக்களை செலுத்தியுள்ளது. பிப்ரவரி 24 முதல் ரஷ்யாவிற்கு 35 பில்லியன் யூரோக்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத் துறைத் தலைவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
- உக்ரைனின் கார்கிவ் நகரில் உள்ள எண்ணெய் கிடங்கை நேற்று ரஷ்ய ராணுவம் தாக்கி அழித்தது. தற்போது இங்கு சேத மதிப்பீடு நடைபெற்று வருகிறது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US