ரஷ்ய அரசையே ஆட்டம் காட்டிய எவ்ஜெனி பிரிகோஜின் : புதினை கதி கலங்க வைத்த யார் இவர்?
ரஷ்யா உலகின் பலம் வாய்ந்த ராணுவ படைகளை கொண்டுள்ளது. அமெரிக்காவிற்கே சவால் விடும் அளவிற்கு ரஷ்யா எந்த அளவுக்கு சக்தி கொண்டதாக இருக்கும் என்று பார்த்துக்கோங்க. அப்படிப்பட்ட ரஷ்யா அரசையே ஆட்டம் காட்டி, கதிகலங்க வைத்துள்ள கூலிப்படையான வாக்னர் அமைப்பு.
ரஷ்யாவிற்கு எதிராக திரும்பிய வாக்னர் அமைப்பு -
உக்ரைன் மீது கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவிற்கு 'வாக்னர்' என்ற மிகப்பெரிய தனியார் ராணுவ அமைப்பு உறுதுணையாக நின்று உக்ரைனுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வந்தது. ஆனால், கடந்த வாரம் அந்த அமைப்பு ரஷ்யாவுக்கு எதிராக திடீரென்று திரும்பியது.
உடனே, ரஷ்ய ராணுவ இன்று ரஷ்ய ராணுவ ஹெலிகாப்டர்கள் Voronezh பகுதியில் உள்ள Wagner குழுவின் எரிபொருள் கிடங்குகளை குண்டுவீசி தாக்குதல் நடத்தியது. இதனால், ரஷ்யா அரசுக்கும், வாக்னர் அமைப்பிற்கும் இடையே பெரும் கிளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
சிம்ம சொர்ப்பமாக இருக்கும் வாக்னர் அமைப்பை ரஷ்யா தலைநகரான மாஸ்கோ நோக்கி செல்லும் உத்தரவிட்ட அதன் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் செயலை உலக நாட்டு மக்களும், உலக நாட்டு தலைவர்களும் உற்று நோக்கியுள்ளனர்.
யாருக்கும் பயப்படாத ரஷ்ய அதிபர் புதினையே ஒரு நொடியில் ஆட்டம் காட்டிய யார் இந்த எவ்ஜெனி பிரிகோஜின்? எப்படி இந்த அமைப்பை தொடங்கினார் என்று விரிவாக பார்ப்போம் -
எவ்ஜெனி பிரிகோஜின் யார்?
எவ்ஜெனி பிரிகோஜின் மிகப்பெரிய தொழிலதிபர். ஒரு காலத்தில் ரஷ்ய அரசின் உணவக ஒப்பந்தங்கள் அனைத்தும் இவரின் நிறுவனத்திற்கே வழங்கப்பட்டது.
இதனால், இவரை ‘புடினின் சமையல்காரர்’ என்று அழைக்கப்பட்டார். இவருக்கும், ரஷ்ய அதிபர் புதினுக்கும் நல்ல நட்பு இருந்தது. கடந்த 1980ம் ஆண்டு ஒரு குற்றத்திற்காக எவ்ஜெனி பிரிகோஜின் சிறைக்குச் சென்றார். சிறையிலிருந்து திரும்பி வந்ததும் சொந்தமாக ஒரு உணவகத்தை ஆரம்பித்தார்.
ஏன் கூலிப்படை தொடங்கினார்?
இவர் நடத்திய உணவகத்திற்கு பெரிய, பெரிய விஐபிக்கள் வரத் தொடங்கினர். இதனால் பல விஐபிக்களிடம் எவ்ஜெனி பிரிகோஜின் நட்பு ஏற்பட்டது. அந்த சமயத்தில்தான் புதின் துணை மேயராக இருந்தார். அடிக்கடி இந்த உணவகத்திற்கு வந்ததால், பிரிகோஜினின் கேட்டரிங் நிறுவனமான கான்கார்ட் அரசாங்க ஒப்பந்தங்கள் செய்தார். இதனால், எவ்ஜெனி பிரிகோஜின் மிகப் பெரிய அளவில் வளர்ந்தார்.
ஆனால், இவர் ரகசியமாக தனியார் ராணுவ குழு ஒன்றை நடத்துகிறார் என்று தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரஷ்யா உக்ரைனிடமிருந்து கிரிமியாவை இணைத்தபோதுதான், நான் தனியார் ராணுவ அமைப்பை நிறுவினேன் என்று வெளிப்படையாக தெரிவித்தார்.
இதன் பிறகு, இவருடைய ராணுவப் படை லிபியா, சிரியா போன்ற நாடுகள் நடத்திய போரில் ஈடுபட்டன. மேலும், கடந்த ஒரு வருடம் மேலாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது.
ரஷ்யாவிற்கு இந்த அமைப்பு உறுதுணையாக நின்று உக்ரைனுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வந்தது. கடந்த மாதம் கூட கிழக்கு உக்ரைனிய நகரமான பாக்முட்டை வாக்னர் குழு கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
அந்த சமயத்தில்தான் போதுமான வெடிமருந்துகளை ரஷ்ய ராணுவம் வழங்கவில்லை என்றும் இதனால், வாக்னர் குழு வீரர்கள் அதிகளவில் உயிரிழந்ததாக வாக்னர் கூலிப்படை குற்றம் சாட்டியது. இந்த சூழலில்தான் ரஷ்ய ராணுவ அமைச்சர் மீதும் ராணுவ தலைமை மீதும் வாக்னர் கூலிப்படை தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |