1,25,000 உக்ரேனிய துருப்புகள் கொல்லப்பட்டுள்ளனர்! ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் அறிவிப்பு
உக்ரைன் எதிர்தாக்குதலில் ஈடுபட்டதில் இருந்து 1,25,000 துருப்புகளை இழந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு அறிவித்துள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் மோதல் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளை எட்டிவிட்டது. ஆனால் உக்ரைன் சூன் மாதத்தில் எதிர்தாக்குதல் நடத்தியபோது பல துருப்புகளை இழந்தது.
இதுகுறித்து ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு (Sergei Shoigu) கூறுகையில், 'உக்ரைன் தனது எதிர்தாக்குதலை சூன் மாதம் தொடங்கியதில் இருந்து 1,25,000 துருப்புகளை இழந்துள்ளது.
Getty Images
அத்துடன் 16,000 யூனிட் அளவுடைய பல்வேறு ஆயுதங்களை இழந்துள்ளது. உக்ரைனில் மொத்த அணிதிரட்டல், மேற்கத்திய ஆயுதங்களை வழங்குதல் மற்றும் உக்ரேனிய கட்டளையின் மூலோபாய இருப்புகளை போரில் அறிமுகப்படுத்துதல் ஆகியவை போர்க்களத்தில் நிலைமையை மாற்றவில்லை.
எங்கள் இராணுவ வீரர்கள் திறமையாகவும், தீர்க்கமாகவும் செயல்படுகிறார்கள். மேலும் சாதகமான நிலைகளை ஆக்கிரமித்து, அனைத்து திசைகளிலும் தங்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களை விரிவுபடுத்துகிறார்கள்' என தெரிவித்துள்ளார்.
அத்துடன் ரஷ்யாவின் ஆயுதப் படைகள் உக்ரைனில் முன் வரிசையில் முன்னேறிவிட்டதாகவும், தீவிரமான பாதுகாப்பை மேற்கொள்வோம் மற்றும் ஆயுதப்படைகளின் போர் திறனை அதிகரிப்போம் என்றும் அவர் கூறினார்.
Russian Defense Ministry
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |