ரஷ்ய தூதரை அவரது துணைவியுடன் வெளியேற்றும் பிரித்தானியா
ரஷ்யா மற்றும் பிரித்தானியா இடையிலான நீடித்த பதற்றத்தின் பின்னணியில், பிரித்தானியா ஒரு ரஷ்ய தூதரை மற்றும் அவரது வாழ்க்கைத் துணையை நாட்டைவிட்டு வெளியேற்ற முடிவு செய்துள்ளது.
ரஷ்யா கடந்த வாரம் ஒரு பிரித்தானிய தூதரை வெளியேற்றியதற்கான எதிர்வினையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து விரிவடையும் பதற்றம்
திங்கட்கிழமையன்று, ரஷ்ய அரசு இரண்டு பிரித்தானிய தூதர்கள் உளவாளிகள் என்று குற்றம் சாட்டியது.
இதனை UK Foreign Office முற்றிலும் மறுத்தது. அந்த இரண்டு தூதர்களும் இரண்டு வாரங்களில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று ரஷ்யா உத்தரவிட்டது.
இதற்குப் பதிலடியாக, ரஷ்ய தூதரகத்தின் அதிகாரிகள் பிரித்தானிய வெளிநாட்டு அலுவலகத்தால் அழைக்கப்பட்டு, அவர்களின் நாட்டின் செயல்பாடுகளை கடுமையாக கண்டனம் செய்யப்பட்டது.
பிரித்தானிய அரசின் பதில்
UK Foreign Office தனது அறிக்கையில், "கடந்த 12 மாதங்களில், ரஷ்யா பிரித்தானிய தூதர்கள் மீது திட்டமிட்ட முறையில் குற்றச்சாட்டுகள் சுமத்தி, அவர்களை துன்புறுத்தும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடந்த வாரம் ஒரு பிரித்தானிய தூதரையும் அவரது துணையும் வெளியேற்றப்பட்டது."
"இது மட்டுமின்றி, ரஷ்யா முற்றிலும் தவறான, உருவாக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை தூதர்களின் மீது சுமத்தி, பிரித்தானிய தூதரகத்தை மூடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது."
பிரித்தானியாவின் நடவடிக்கை
இதற்கு பதிலளித்து, ஒரு ரஷ்ய தூதரின் பதவியை ரத்து செய்வதோடு, அவரது வாழ்க்கைத் துணையையும் வெளியேற்ற பிரித்தானிய அரசு முடிவு செய்துள்ளது.
"சூழ்நிலையால் நாங்கள் இந்த முடிவை எடுக்கும் கட்டாயத்தில் இருக்கிறோம். ரஷ்யாவின் அடுத்தடுத்த துன்புறுத்தல்களுக்கு எதிராக, எங்களது தூதர்களின் பாதுகாப்பிற்காக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கிறது." என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இரு நாடுகளின் உறவின்மீது மேலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யா இதை தொடர்ந்தால், அதற்கேற்ப மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பிரித்தானிய அரசு எச்சரித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |