கெர்சனில் ரஷ்ய படைகளின் காட்டுமிராண்டித்தனம்: ஜென்லென்ஸ்கியை கண்டதும் ஆனந்த கண்ணீரில் பொதுமக்கள்!
ரஷ்யாவின் மிக கொடூரமான காட்டுமிராண்டிதனத்தால் கெர்சன் நகரில் மட்டும் 400க்கும் மேற்பட்ட போர்க்குற்றங்கள் அரங்கேறி இருப்பதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
கெர்சனில் போர் அத்துமீறல்
உக்ரைனில் உள்ள போர் புலனாய்வாளர்கள் கெர்சனில் மட்டும் 400க்கும் அதிகமான ரஷ்ய போர் குற்றங்களை ஆவணப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, நாட்டு மக்களுக்கு நேற்று ஆற்றிய உரையில், கெர்சனில் இறந்த ராணுவ வீரர்களின் உடல்களுடன் சேர்த்து பொதுமக்களின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
SKY NEWS
அத்துடன் ரஷ்யா ராணுவம் நமது நாட்டிற்குள் நுழைந்து பிற பகுதிகளில் செய்த அதே காட்டுமிராண்டித்தனத்தை கெர்சனிலும் விட்டுச் சென்று இருப்பதாகவும், இந்த கண்டுபிடிப்புகள் முழு விசாரணையை தூண்டியுள்ளது என்றும் பேசியுள்ளார்.
ஆனந்த கண்ணீரில் கெர்சன் மக்கள்
உக்ரைன் மீதான படையெடுப்பு தொடங்கிய ஆரம்பத்தில் ரஷ்ய படைகளால் கைப்பற்றப்பட்ட கெர்சன் நகரம், கடந்த வெள்ளியன்று ரஷ்ய துருப்புகளிடம் இருந்து விடுவிக்கப்பட்டது.
SKY NEWS
இதனை தொடர்ந்து ரஷ்ய ராணுவ வீரர்கள் வெளியேறிய சில நாட்களிலேயே உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கெர்சன் நகருக்கு வருகை புரிந்துள்ளார்.
அப்போது பெரும் திரளாக திரண்டு இருந்த பொதுமக்கள் ஆரவாரத்துடனும் கண்ணீருடனும் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை வரவேற்றனர்.
SKY NEWS
SKY NEWS